னடாவின் முன்னாள் ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரர் (Snowboarder) ரயன் வெடிங் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய கொலைகள் மற்றும் குற்றச்செயல்கள் குறித்த புதிய விபரங்களை சிபிசி நியூஸ் (CBC News) வெளியிட்டுள்ளது.
2024 கொலைச் சம்பவம்: ஏப்ரல் 1, 2024 அன்று நயாகரா பால்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டு வாசலில் வைத்து ரேன்டி ஃபேடர் (Randy Fader) என்ற 29 வயது நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிஸார் கருதுகின்றனர்.
கொலைக்கான உத்தரவு: அமெரிக்க வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, ரயன் வெடிங்கின் வலது கரமாகச் செயல்பட்ட ஆண்ட்ரூ கிளார்க், ‘மிஸ்டர் பெர்பெக்ட்’ (Mr. Perfect) என அழைக்கப்படும் மாலிக் டேமியன் கன்னிங்ஹாம் என்ற வாடகைக்கொலையாளிக்கு இந்த கொலையைச் செய்ய 100,000 டாலர்கள் தருவதாக வாக்களித்துள்ளார். “அவனது மண்டையைச் சிதறடி” (blow this guys top off) என கிளார்க் குறியாக்கப்பட்ட செய்திகள் (Encrypted chats) மூலம் உத்தரவிட்டுள்ளார்.
மறைக்கப்பட்ட உண்மைகள்: இந்தக் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற ஆடி (Audi Q7) கார் மற்றும் துப்பாக்கி ஆகியவை இன்னும் பல தீர்க்கப்படாத குற்றங்களுடன் தொடர்புடையவை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொல்லப்பட்ட ஃபேடரின் ஐபோனை (iPhone) இன்னும் பொலிஸாரால் அன்லாக் (Unlock) செய்ய முடியவில்லை. அது திறக்கப்பட்டால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவறான இலக்குகள்: இந்த கும்பல் பல கொலைகளைத் திட்டமிட்டதுடன், சில சமயங்களில் ஆள்மாறாட்டம் காரணமாக அப்பாவி பொதுமக்களையும் கொன்றுள்ளது. குறிப்பாக, கலிடோன் (Caledon) பகுதியில் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினர் தவறுதலாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் இந்தக் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக அமெரிக்கத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தற்போதைய நிலை: ரயன் வெடிங் மெக்சிகோவில் வைத்து கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வாடகைக்கொலையாளி கன்னிங்ஹாம் தற்போது கனடியக் காவலில் உள்ளதுடன், அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடி வருகிறார்.
இந்த வலையமைப்பு வட அமெரிக்கா முழுவதும் ஆண்டுக்கு 60 டன் கொக்கைன் போதைப்பொருளைக் கடத்தி வந்ததாகவும், தங்களுக்குப் போட்டியாக இருப்பவர்களை சர்வதேச வாடகைக்கொலையாளிகள் மூலம் தீர்த்துக்கட்டியதாகவும் எப்.பி.ஐ (FBI) விசாரணையில் தெரியவந்துள்ளது.