ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிர்வாகப் பிரச்சினை?

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிர்வாகப் பலவீனம் மற்றும் வைத்திய அத்தியட்சகரின் இடமாற்றத்தினால் வைத்தியசாலைச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தெரிவித்து, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் சுகாதார அமைச்சருக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஏறாவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்குச் சேவையாற்றி வரும் இந்த வைத்தியசாலையில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிரந்தர வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றும் டொக்டர் வருண சம்பத், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு ‘மேலதிக கடமை’ (Cover-up duty) அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வைத்தியசாலையின் நிரந்தர நிர்வாகத் தலைவர் வாரத்தில் மிகக்கூடுலான நாட்கள் வேறொரு மாகாணத்தில் கடமையாற்றுவதால், இங்குள்ள நிர்வாக ஒழுங்குகள் சீர்குலைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சுபைர் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறாவூர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் வசித்து வருகின்றனர்.

ஏறாவூர் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரம் பயன்பாடின்றி உள்ளதுடன், அப்பகுதி தனவந்தர்கள் வழங்க முன்வந்த மேலதிக இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரங்களைப் பொறுப்பேற்று இப்பிரிவைச் செயற்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தூர இடங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுகின்றனர். பொது சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் இண்மையால் இந்த வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய சத்திரசிகிச்சைக் கூடம் பயன்பாடின்றி மூடியே காணப்படுகிறது.

இதனால் அங்கிருக்கும் பெறுமதிமிக்க வைத்திய உபகரணங்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் 350 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவுக்கு (OPD) வரும் நிலையில், முறையான மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பலவீனம் காரணமாகச் சேவைகளின் தரம் மிக மோசமடைந்துள்ளது.

இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் கடும் விமர்சனங்களையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர். 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால் அதன் பின்னரான காலப்பகுதியில் உட்கட்டுமான அபிவிருத்திகளை தவிர எந்தவொரு முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. வைத்தியசாலையின் மேலதிக சேவைகள் அதன் முன்னேற்றம் ஆகியன வைத்திய அத்தியட்சகரின் முயற்சியிலும் அவருடைய வினைத்திறனான நிர்வாக செயற்பாடுளிலும் தங்கியுள்ளது.

ஏறாவூர் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் இங்கிருந்து வைத்தியசாலையை முன்னேற்றவேண்டிய காலகட்டத்தில். கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் அவரை சப்ரகமுவ மாகாணத்திற்குச் சென்று கடமையாற்ற பணித்திருப்பது இங்குள்ள மக்களுக்கு செய்யும் பாரிய அநியாயமாகும்.

ஒரு நிறுவனத்தினுடைய தலைவருக்கு Cover up Duty வழங்குவதாக இருந்தால் அவர் பணியாற்றுகின்ற மாவட்டத்தில் அல்லது அவருக்கு பக்கத்திலுள்ள நிறுவனங்களை வழங்குவது வழக்கமாகும். ஆனால் ஏறாவூர் வைத்தியசாலையில் இடம்பெற்றிருப்பது ஒரு புதுமையான வேடிக்கையான விடயமாகும்.

இது மாகாண சுகாதாரத் துறையின் நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகிறது என சுபைர் தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

எனவே, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் எனவும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முழுநேர நிர்வாக அதிகாரியை நியமித்து, தேவையான விசேட வைத்திய நிபுணர்களையும் நியமித்து இரத்த சுத்திகரிப்பு (Dialysis) பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைப் பிரிவினையும் உடன் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சுபைர் அந்தக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி