உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த குடிமகனுக்கான விருது

அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the Year) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரமட்டா மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது சேவையை பாராட்டி, ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழா பரமட்டா டவுன் ஹாலில் நடைபெற்றது.

மோசஸ் வேதமுத்து SOHAS அறக்கட்டளையின் (Support for Homeless and Asylum Seekers) நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

அவரது தலைமையில், வீடற்றவர்கள், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கு ஆதரவு வழங்கும் பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரது அர்ப்பணிப்பான சமூகப் பணியை முன்னிட்டு, வருடாந்திர குடிமகன் விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

“ஆண்டின் சிறந்த குடிமகனாக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த பெருமையும் பொறுப்பும் அளிக்கிறது. இது எனது சேவையை மேலும் சிறப்பாக செய்யும் உந்துதலை அளிக்கிறது” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

“ஒரு நல்ல குடிமகனாக இருப்பது என்பது, சமூகத்தின் நலனுக்காக பொறுப்புடன் செயல்படுவதாகும். நமது சிறிய செயல்களே தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நம்புகிறேன்.

இந்த விருது எனது சேவை, பொறுப்பு மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் உறுதியை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், சமூக சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மோசஸ் வேதமுத்துவின் இந்த சாதனை, தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்