அனைத்துலக தமிழர் பேரவையினால் கனடாவில் உலக தமிழர் ஆய்வு மாநாடு!

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் உலக தமிழர் ஆய்வு மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக தமிழர் பேரவை நேற்று (06.05.2026) கனடா மார்க்கம் பிராந்தியத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்த மாதம் முக்கியமான மாதம் மெய்சிலிர்க்கும் மாதம் இந்தமாதத்தையும் நாங்கள் நினைவுகூரவேண்டும் அதனை தாண்டி போகமுடியாது.

அனைத்துலக தமிழர் பேரவை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்ட அமைப்பு ஒரே சிந்தனை உடையவர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு.

இது ஒரு புலம்பெயர் அமைப்பு -கனடாவிற்கு மாத்திரம் உரியதல்ல,புலம்பெயர் தமிழர்களை தளமாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு,ஜனநாயக ரீதியில் பயணிக்கின்ற அமைப்பு ஆனால் இடைக்கால நிருவாக சபை இரண்டு வருடகாலத்திற்கு பயணிக்கும் டிசம்பர்  மாதத்துடன் அதன் காலம் முடிவடைகின்றது.

ஏதிர்காலத்தில் உறுப்பினர்களை இணைத்து தனக்கான நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ளும்.
அனைத்துலக தமிழர் பேரவையை நாங்கள் உருவாக்கும்போது எங்களுக்கு இருந்த எண்ணப்பாடுகள்,பலரோடும் எங்களுடன் இணைவாக உள்ள பலரோடும் கலந்து ஆலோசித்து இன்றைய நிலையில தமிழர் தாயகத்தை வலிமையடைச்செய்யவேண்டிய தேவை மிக முக்கியமாக இருக்கின்றது.

2009க்கு பிறகு போரின் வீழ்ச்சிக்கு பிறகு நிறையவே நலிவுற்று இருக்கின்ற தேசத்தை நாங்கள் வலிமையடைச்செய்யவேண்டும் – என்பதுதான் முக்கிய இலக்கு நோக்கம்.

அந்த அடிப்படையில் நாங்கள் வடக்குகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்தும் அதேவேளை சர்வதேச அளவில எங்களை பலப்படுத்துவதற்கு ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும்.

வடக்குகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துகின்ற விடயங்களை அவதானிக்கின்ற அதேநேரத்தில் ,சர்வதேச அளவில் ஐக்கியமாக இருப்பதற்கு தமிழ் மொழி கலை கலாசாரம் தான் எங்கள் கையில் உள்ள ஒரு விடயம்.

இன்றைய சூழ்நிலையில் அரசியலை வைத்து நாங்கள் ஒன்றினைவதற்கான வாய்ப்பே இல்லை என்னுடைய கணிப்பு அடுத்த 20 வருடங்களுக்கு அதற்கான வாய்ப்பே இல்லை, நாங்கள் அதனை இழந்திட்டம் ஆனால் முயற்சிப்பம், இழந்ததற்காக அதனை விடவேண்டிய தேவையில்லை முயற்சி செய்வோம்.

இந்த அமைப்பு எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் இறங்காது ஏற்கனவே பலர் செய்கின்றார்கள் அவர்கள் செய்யட்டும்.
சரியான அரசியலுக்கு நாங்கள் வலிமையை வழங்குவோம் ஆனால் எங்கள் கவனம் அபிவிருத்தி தொடர்பானது.அது எல்லாவகையான அபிவிருத்தியும் பொருளாதார அபிவிருத்தி கல்வி அபிவிருத்தி எல்லா அபிவிருத்தியும் பொருளாதார அபிவிருத்தியுடன் பின்னிப்பிணைந்தது.

அதேவேளை சர்வதேச அளவில் நாங்கள் ஒன்றிணைவது மிக முக்கியம் அந்த அடிப்படையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாங்கள் ஒருங்கிணைந்த வடக்குகிழக்கின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒரு ஆய்வு மாநாட்டினை நடத்தியிருந்தோம்.

எந்த விடயத்தை எடுத்தாலும் ஆய்வுகள் தரவுகள் ஊடாக முன்னெடுக்கின்றோம் இந்த ஆய்வுகள் எங்கள் அமைப்பிற்கானது மாத்திரம் அல்ல புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஆய்வுகள் வடக்குகிழக்கு அபிவிருத்திக்கு உதவியாக அமையும் என்ற அடிப்படையிலேயே இந்த மாநாட்டை நாங்கள் நடத்தினோம்.
இந்த வருடம் எங்கள் இரண்டாவது வருடம் ஒக்டோபரில் நாங்கள் ஏதாவது ஒரு மாநாடு செய்யவேண்டும் என பலருடன் கலந்துரையாடி நாங்கள் எடுத்துக்கொண்ட விடயம் என்னவென்றால் போன வருடம் நாங்கள் கடந்த வருடம் வடக்குகிழக்கின் மேம்பாட்டிற்காக செய்தனாங்கள் இந்த முறை உலகத்தமிழர் ஒருங்கிணையும் நிகழ்வாக ஒன்றை செய்யவேண்டும் அதற்குள்ள ஒரேயொரு விடயம் தமிழ் தமிழ்மொழி தமிழர்.

அந்த அடிப்படையில் ஒக்டோபர் மாதம் 15 முதல் 18 திகதி வரை உலகதமிழர் ஆய்வு மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி