இலங்கையில் வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிப்பு!

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜூன திலககரத்ன தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கான புதிய இதய வடிகுழாய் பிரிவின் கட்டட அடிக்கல் நாட்டு விழா சம்பிரதாயபூர்வமாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற சுகாதார (வைத்திய சேவை) பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜூன திலககரத்ன தெரிவிக்கையில்,

உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய, இலங்கையில் உள்ள வயதானவர்களில் 34 சதவீதமானோர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களில் 25 சதவீதமானோர் மாத்திரமே உரிய சிகிச்சைகளைப் பெற்று நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாதாந்த சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சமூகமளிப்பவர்களில் அதிகளவானோர் இருதய நோயாளிகளாவர்.

ஆகையால் இருதய வடிகுழாய் பிரிவு போன்ற சிகிச்சைப் பிரிவுகளின் தேவை அதிகரித்துள்ளது. அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த சிகிச்சைப் பிரிவின் மூலம் கொழும்பு மற்றும் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலைகளுக்கு விசேட இருதய சிகிச்சைக்காக அனுப்பப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிடுகையில்,

தற்போது அரச வைத்தியசாலைக் கட்டமைப்பில் 11 இருதய வடிகுழாய் பிரிவுகள் மாத்திரமே உள்ளன. ஆகையால் சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கமைய இவ்வருடம் அரச வைத்தியசாலைகளில் 7 இதய வடிகுழாய் பிரிவுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை, களுபோவில வைத்தியசாலைகள் உள்ளிட்ட 7 வைத்தியசாலைகளில் இவை நிர்மாணிக்கப்படவுள்ளன.

அதேபோல் அடுத்த வருடம் நாடளாவிய ரீதியில் சுமார் 14 இதய வடிகுழாய் பிரிவுகளை ஸ்தாபிப்பதற்கும் சுகாதார அமைச்சால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டின் முதல் தேசிய இருதய நோய்க்கான வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன் கட்டட நிர்மாணப் பணிகளை இவ்வருடம் ஆரம்பிப்பதற்குத் தேவையான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 16 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிட நிர்மாணப் பணியை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

jai

அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது

February 18, 2026

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான

ss

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு

February 18, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு நகரத்தில்

44

நாகர்கோவில் பகுதியில் மனைவியை சரமாரியாகக் தாக்கிய கணவன்!

February 18, 2026

ணவனால் சரமாரியாகக் தாக்கப்பட்ட மனைவி படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவில்

tru

ட்ரம்பின் விசேட பிரதிநிதியை சந்தித்த ஜனாதிபதி

February 18, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான

akkuresa

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக்கொலை : சகோதரர்களுக்கு விளக்கமறியல்

February 18, 2026

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சகோதரர்கள் இருவரும் மார்ச்

arrest

பிரபல நடிகை பியூமியின் மகன் உட்பட எழுவரின் விளக்கமறியல் நீடிப்பு

February 18, 2026

ராஜகிரிய, கலபலுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும், பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் உட்பட

25

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து : 25 பேர் காயம்

February 18, 2026

ஹம்பாந்தோட்டை – மாத்தறை பிரதான வீதியின் பல்லேமலல பகுதியில் இன்று இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றும், தனியார் பேருந்தொன்றும்

chand

நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்

February 18, 2026

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது” என கடற்றொழில், நீரியல் மற்றும்

vik

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

February 18, 2026

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவுமில்லை.

fff

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ளப் போவதில்லை – வத்திக்கான் அறிவிப்பு

February 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

sy

ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை

February 18, 2026

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு

sp

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து; 05 இளைஞர்கள் உயிரிழப்பு

February 18, 2026

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கேட்டலோனியா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 05