இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு மையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
தொலைத்தொடர்பு அதிகாரிகளின் உதவியுடன் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட இந்த முற்றுகையின் போது, மாலைதீவு பிரஜை ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்திடிய (Attidiya) பகுதியில் பயண முகவர் நிறுவனம் (travel company) என்ற போர்வையில் இந்த மையம் இரகசியமாக இயங்கி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாட்டிலைட் ரிசீவர்கள் (satellite receivers), செயற்கைக்கோள் தட்டுகள் (satellite dishes), கணினிகள், ஸ்டார்லிங்க் (Starlink) சாதனம் மற்றும் பிற ஒலிபரப்பு உபகரணங்கள் உட்பட சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் தரவுகளைப் பயன்படுத்தி, செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பதிவிறக்கம் செய்து, பின்னர் இந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக விநியோகித்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்