செங்கல்பட்டு:
“நாங்கள் வெறும் ஆள் மாற்றத்திற்கோ, ஆட்சி மாற்றத்திற்கோ வந்தவர்கள் அல்ல; ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்திற்காகக் களம் கண்டுள்ள புரட்சியாளர்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் அதிரடியாகப் பேசியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட வாக்கு வங்கிச் சரிவு மற்றும் தவெக-வின் புதிய ஆட்சி குறித்துப் பேசிய சீமான், “இந்தத் தேர்தலில் திமுக-வுக்கு இப்போது காங்கிரஸின் துரோகம் நன்றாகத் தெரிந்திருக்கும். இவ்வளவு காலம் பதவிக்காக திமுக-வுடன் நின்ற காங்கிரஸ், இப்போது அவர்களைக் கேவலப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலினுடன் மேடை ஏற மறுத்த ராகுல் காந்தி, இன்று விஜய் பதவியேற்பு விழாவில் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார். விஜய் பதவியேற்கும் போது, திமுக-வினர் விமர்சித்த ‘தீய சக்திகள்’ எல்லாம் திடீரென ‘தூய சக்திகளாக’ மாறிவிட்டார்களா? இந்தத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி” என்று சாடினார்.
தொடர்ந்து தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விவாதித்த அவர், “மக்களுக்குக் கொள்கை ரீதியான கருத்துகளை விடக் கவர்ச்சி தான் அதிகமாகத் தேவைப்படுகிறது. எதுக்கு வாக்களித்தோம் என்று தெரியாமலேயே மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழகத்திற்கு ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பது தெரியாமல் தான் விஜய் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டாரா? தவெக கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் இன்னும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க வேண்டும். விஜய் போரிட்டு ஈரானைக் கைப்பற்றினால் தான், அவர்கள் அறிவித்தபடி 6 சிலிண்டர்களை இலவசமாக வழங்க முடியும். இன்னும் சில நாட்களில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குக் கஷ்டம் வரும் போது நான் போராட வரமாட்டேன்” எனத் தனது பாணியில் விமர்சித்தார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பேசிய சீமான், “நல்லவேளை என்னை மக்கள் தோற்கடித்தார்கள். நான் வெற்றி பெற்று 5 பேர் சட்டமன்றத்திற்குள் போயிருந்தால், அவர்கள் எல்லோரையும் வெளியே தான் அனுப்பியிருப்பார்கள். நாங்கள் 5 சதவீத முதலாளிகளுக்கானவர்கள் அல்ல; 95 சதவீத உழைக்கும் மக்களுக்கானவர்கள். பூனையை விடப் புலிகள் வலிமையானவை என்பது எலிகளுக்கு எப்போதும் தெரியாது. வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி எவ்விதக் கூட்டணியுமின்றித் தனித்தே போட்டியிடும். இந்தத் தேர்தலில் இழந்த வாக்குகளை விடக் கூடுதலான வாக்குகளைப் பெற்று, விடியாத இரவொன்று கிடையாது என்பதை நிரூபிப்போம்” என்று தொண்டர்கள் மத்தியில் முழங்கினார்.
#SeemanSpeech #NaamTamilarKatchi #NTK_2026 #VijayAsCM #BreakingNews #May19 #ChengalpattuPublicMeeting #TamilNaduPolitics #TVK_Government #ThalapathyVijay #CongressBetrayal #RahulGandhi #DMK_Defeat #PoliticalChangeTN #NTK_SoloIn2029 #SeemanSlamsVijay #DravidianPolitics #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`