அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடியர்களைப் பொறுத்தவரை விதிகள் உண்மையில் மாறவில்லை. எல்லை அதிகாரிகளுக்கு இன்னும் மிக விரிவான அதிகாரங்கள் உள்ளன. புதிய விதிகளை விட அமலாக்கப் பிரிவினரின் நேரடித் தலையீடு மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுதான் கனடியர்களைச் சற்று திகைக்க வைத்துள்ளது” என்று டொராண்டோவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கொள்கை ஆய்வாளர் மரியோ பெல்லிஸ்ஸிமோ கூறினார்.

திங்களன்று காலை அட்லாண்டா நியூ ஆர்லியன்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட பல பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் சில கூட்டாட்சி அதிகாரிகள் இருப்பதை அசோசியேட்டட் பிரஸ் ) கவனித்தது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தியளிக்க ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகஅதிகாரிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையங்களுக்கு கூட்டாட்சி குடிவரவு முகவர்களை அனுப்பி வெளியேறும் வழிகளைக் கண்காணிக்க அல்லது பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க உத்தரவிடுவேன் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படாமல் அவற்றுக்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்ததால் பிப்ரவரி 14 முதல் அந்தத் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டது.

சுங்க அமலாக்கப் பிரிவு என்ன செய்ய முடியும்?
கனடாவில் குடிவரவு அதிகாரிகளால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அந்தத் தடுத்து வைப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் நீங்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டால் “நீங்கள் இப்போது அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பெல்லிஸ்ஸிமோ எச்சரித்தார்.

“கனடா தூதரக ஆதரவை வழங்க முடியும் குடும்பங்களுக்கு உதவ முடியும் ஆனால் இறுதியில் ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பின் முடிவை கனடாவால் ரத்து செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

பொதுவாக நீங்கள் “இரண்டாம் கட்ட சோதனைக்கு” அனுப்பப்பட்டால் பயணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரமும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உண்டு.

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டால் வழக்கறிஞரை நியமிக்க உங்களுக்கு உரிமை உண்டுஆனால் அரசாங்கம் உங்களுக்காக ஒருவரை வழங்க வேண்டிய அவசியமில்லை. இலவச அல்லது குறைந்த கட்டண வழக்கறிஞர்களின் பட்டியலைக் கேளுங்கள் என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்(ACLU)தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞரையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ அழைக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றும் (ACLU) குறிப்பிடுகிறது.

“பொய் சொல்லாதீர்கள் அல்லது தவறான ஆவணங்களைக் காட்டாதீர்கள்; அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று இமிக்ரண்ட் டிஃபென்ஸ் புராஜெக்ட் (Immigrant Defense Project) அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதில் “தெளிவாக” இருப்பதும் தேவையான ஆவணங்களை (விமான டிக்கெட்டுகள் தங்குமிட விவரங்கள் பயண நோக்கத்திற்கான கடிதங்கள்) தயாராக வைத்திருப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்.

மார்ச் மாதத்தில் கனடியர்கள் உட்பட 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்கு வரும் எந்தவொரு வெளிநாட்டினரும் அபராதத்தைத் தவிர்க்க அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கனடிய தூதரகம் அல்லது அட்லாண்டா பாஸ்டன் சிகாகோ டல்லாஸ் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களை உதவிக்கு அணுகலாம்.

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடியர்களைப் பொறுத்தவரை விதிகள் உண்மையில் மாறவில்லை. எல்லை அதிகாரிகளுக்கு இன்னும் மிக விரிவான அதிகாரங்கள் உள்ளன. புதிய விதிகளை விட அமலாக்கப் பிரிவினரின் நேரடித் தலையீடு மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுதான் கனடியர்களைச் சற்று திகைக்க வைத்துள்ளது” என்று டொராண்டோவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கொள்கை ஆய்வாளர் மரியோ பெல்லிஸ்ஸிமோ கூறினார்.

திங்களன்று காலை அட்லாண்டா நியூ ஆர்லியன்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட பல பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் சில கூட்டாட்சி அதிகாரிகள் இருப்பதை அசோசியேட்டட் பிரஸ் ) கவனித்தது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தியளிக்க ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகஅதிகாரிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையங்களுக்கு கூட்டாட்சி குடிவரவு முகவர்களை அனுப்பி வெளியேறும் வழிகளைக் கண்காணிக்க அல்லது பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க உத்தரவிடுவேன் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படாமல் அவற்றுக்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்ததால் பிப்ரவரி 14 முதல் அந்தத் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டது.

சுங்க அமலாக்கப் பிரிவு என்ன செய்ய முடியும்?
கனடாவில் குடிவரவு அதிகாரிகளால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அந்தத் தடுத்து வைப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் நீங்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டால் “நீங்கள் இப்போது அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பெல்லிஸ்ஸிமோ எச்சரித்தார்.

“கனடா தூதரக ஆதரவை வழங்க முடியும் குடும்பங்களுக்கு உதவ முடியும் ஆனால் இறுதியில் ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பின் முடிவை கனடாவால் ரத்து செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

பொதுவாக நீங்கள் “இரண்டாம் கட்ட சோதனைக்கு” அனுப்பப்பட்டால் பயணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரமும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உண்டு.

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டால் வழக்கறிஞரை நியமிக்க உங்களுக்கு உரிமை உண்டுஆனால் அரசாங்கம் உங்களுக்காக ஒருவரை வழங்க வேண்டிய அவசியமில்லை. இலவச அல்லது குறைந்த கட்டண வழக்கறிஞர்களின் பட்டியலைக் கேளுங்கள் என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்(ACLU)தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞரையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ அழைக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றும் (ACLU) குறிப்பிடுகிறது.

“பொய் சொல்லாதீர்கள் அல்லது தவறான ஆவணங்களைக் காட்டாதீர்கள்; அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று இமிக்ரண்ட் டிஃபென்ஸ் புராஜெக்ட் (Immigrant Defense Project) அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதில் “தெளிவாக” இருப்பதும் தேவையான ஆவணங்களை (விமான டிக்கெட்டுகள் தங்குமிட விவரங்கள் பயண நோக்கத்திற்கான கடிதங்கள்) தயாராக வைத்திருப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்.

மார்ச் மாதத்தில் கனடியர்கள் உட்பட 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்கு வரும் எந்தவொரு வெளிநாட்டினரும் அபராதத்தைத் தவிர்க்க அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கனடிய தூதரகம் அல்லது அட்லாண்டா பாஸ்டன் சிகாகோ டல்லாஸ் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களை உதவிக்கு அணுகலாம்.

Omalbe

பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை – ஓமல்பே சோபித தேரர்

May 14, 2026

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க

IJPMI3VQG5GVPFMLGZGLSHBJXA

ரெட் டீர் பகுதியில் 14 வயது சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

கனடாவின் ரெட் டீர் (Red Deer) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக

weather

காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் படிப்படியாக குறையும்

May 14, 2026

மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் காணப்படும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு

QGKL6DBIBZEHBI2AL2ENAGP3SI

அல்பர்ட்டா பிரிவினை மனுவை இரத்து செய்த நீதிமன்றம்: முதற் தேச மக்களின் (First Nations) வெற்றி

May 14, 2026

அல்பர்ட்டா மாகாணத்தைப் பிரிப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய மனுவை (Separatist petition) செல்லாது என அறிவித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. முதற்

mark

கனடாவின் புதிய தேசிய மின்சார மூலோபாயம்: பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவிக்கவுள்ளார்

May 14, 2026

கனடிய அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார மூலோபாயத்தை (Clean electricity strategy) பிரதமர் மார்க் கார்னி இன்று (வியாழக்கிழமை)

6ORIASPXUVDQTPFKTFQZZ5VA7U

ஸ்கார்பரோவில் சோகம்: இரண்டு வயதுக் குழந்தையைக் கொன்றதாகத் தாய் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது

May 14, 2026

னடாவின் ஸ்கார்பரோ (Scarborough) பகுதியில், தனது இரண்டு வயது பூர்த்தியாவதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், ஒரு பெண்

65ZVLLNBG5GHNHIV3BZUWPIZBM

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் உயிரிழப்பு

May 14, 2026

கனடாவின் வான் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional

Mythri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீதும் நிதி மோசடி வழக்கு; அபராதம் தொடர்பில் அறிக்கை கோரல்

May 14, 2026

கந்தளாய் சீனி கைத்தொழிற்சாலை நிதி மோசடி வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றிய குசுமதாச மஹாநாமவுக்கு

canada courts

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களைப் பகிர்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

May 14, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை (Child sexual abuse and exploitation material) கைவசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றைப் பரிமாற்றம்

kan

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்