அமெரிக்காவின் உதவியுடன் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான கண்காட்சி!

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிக் கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான புவியியல் அமைவிடம்சார் செயற்கை நுண்ணறிவு (GeoAI) தொடர்பான கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கினை, பேரனர்த்த அபாய முகாமைத்துவ நிபுணர்களுக்கான சங்கத்துடன் (ADRiMP) இணைந்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நடத்தவிருக்கிறது.

மே மாதம் 14 ஆம் திகதி இக்கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும். மேம்பட்ட வரைபடக் கருவிகளும், அமெரிக்கா தலைமையிலான செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கங்களும் பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலையையும், அவற்றிற்கான பதிலளிப்பையும் ​எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதை இந்நிகழ்வு காட்சிப்படுத்தும்.

வரைபடங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலைக் கோலங்கள் போன்ற புவியியல் தரவுகளை, செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, இயற்கைப் பேரனர்த்தங்களை அதிகாரிகள் சிறப்பாக எதிர்வு கூறுவதற்கும், கண்காணிப்பதற்கும் மற்றும் அவற்றிற்கான பதிலளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் GeoAI உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் அமைவிடம்சார் தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தைப் பின்பற்றி, வெள்ளப்பெருக்கு, புயல் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற அவசரகால நிலைமைகளில் விரைவான, மிகவும் துல்லியமான மற்றும் தரவுகள் மீதமைந்த முடிவுகளை மேற்கொள்வதற்கு இக்கருவிகள் உதவிசெய்கின்றன.

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரழிவினைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் பேரனர்த்தங்களின் போதான மீண்டெழும் தன்மைக்கான GeoAI முன்முயற்சியினை ஆரம்பிப்பதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உதவி செய்தது. ADRiMP உடன் இணைந்து, பேரனர்த்த முகாமைத்துவ நிபுணர்களான கலாநிதி நொவில் விஜேசேகர மற்றும் கலாநிதி அஸ்லம் சஜா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இச்செயற் திட்டமானது, தீவிர வானிலை நிகழ்வுகளின்போது பதிலளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இலங்கையின் திறனை பலப்படுத்துவதையும், நீண்டகால மீண்டெழும் திறனைக் கட்டியெழுப்புவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

இச்செயற்திட்டமானது, 150 புவியியல் தகவல் அமைப்பு (GIS) தொழில் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ளதுடன், பேரனர்த்த அபாய முகாமைத்துவத்தினை மேம்படுத்துவதற்கான, செயற்கை நுண்ணறிவினால் மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் வழங்கியுள்ளது. உதாரணமாக, வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகளை நிகழ் நேரத்தில் வரைபடமாக்குவதற்கும், குறிப்பிட்ட சமூகங்களை ஒரு புயல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைக் கணிப்பதற்கும், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மிகவும் செயற்திறனுடைய வகையில் மக்களை வெளியேற்றுவதை திட்டமிடுவதற்கும் இக்கருவிகள் உதவியாக அமையும்.

இக்கண்காட்சியில் இவ்வாறான திறன்கள் விளக்கிக்காட்டப்படும். இலங்கை முழுவதும் ஏற்படக்கூடிய மெய்யான பேரனர்த்த சவால்களுக்கு இத்தொழிநுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்கும் வகையில், புத்தாக்க, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட GeoAI தீர்வுகள் இக்கண்காட்சி மற்றும் கலந்தாய்வரங்கில் காட்சிப்படுத்தப்படும்.

மே மாதம் 14 ஆம் திகதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். இதைப் பார்வையிடுவதற்காக பதிவு செய்தல் அவசியமாகும். பதிவு செய்வதற்கு https://arcg.is/0b9bbL2 எனும் இணைப்பினை சொடுக்கவும்.

இலங்கையில் அமெரிக்கத் தூதரகத்தின் முன்முயற்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு https://lk.usembassy.gov/ எனும் இணையத்தளத்தினைப் பார்வையிடுவதுடன் சமூக ஊடகங்களில் @USEmbSL இனைப் பின்தொடரவும்.

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்

arr

உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மயானத்தில் இருவர் கைது

July 26, 2026

பொரலஸ்துவை – பெல்லன்வில உணவக உரிமையாளருக்குச் சுட்டுக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்த துப்பாக்கித்தாரியும் ஓட்டுநரும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்று ஒரு மணி