திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அச்சல திவாக என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாநிதி சூரியப்பெரும தனது இலங்கை கடவுச்சீட்டுடன் மேலதிகமாக அவுஸ்திரேலிய குடியுரிமையையும் கொண்டுள்ளதாக அவர் அந்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொது திறைசேரியில் அண்மையில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு (cyber theft) சம்பவம் தொடர்பாக கலாநிதி சூரியப்பெருமவின் பெயர் அடிபட்டு வரும் நிலையில், இந்த விசாரணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.