திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் இருந்து இன்று (2) சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டவற்றில் 4 மோட்டார் குண்டுகள், 2 மோட்டார் குண்டு சாதனங்கள் மற்றும் ரீ-56 ரக துப்பாக்கிக்கான 75 தோட்டாக்கள் அடங்கும்.
வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் நடத்தி வருகின்றனர்.