வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் பௌதிக மற்றும் நிதியியல் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நீதித்துறை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் நீதிமன்றக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதே நோக்கமாகும் என்றும், அதற்காக நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகம், நீதி அமைச்சுக் கட்டிடம், புதுக்கடை நீதிமன்ற வளாகம், காலி, மாத்தளை, கந்தளாய் உட்பட புதிய நீதிமன்ற வளாகங்களின் நிர்மாணப் பணிகள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மேலும், 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் நிர்மாணிக்கும் திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் கீழ் 79 மில்லியன் மூலதனச் செலவுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம், சட்டவரைஞர் திணைக்களத்தின் கீழ் 38 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு ஆராயப்பட்டன.

தற்போது முக்கிய பங்கு வகிக்கும் சட்டவரைஞர் திணைக்களத்திற்குத் தேவையான மனித வள அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக அதன் செயல்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதன்படி 635 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், அது 701 மில்லியன் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆய்வுகூட வசதிகளை வழங்குவதற்குரிய உபகரணங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் கிடைக்கப்பெறும் எனவும் இங்கு குறிப்பிடப்பட்டதுடன், மாதமொன்றுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பகுப்பாய்வு அறிக்கைகளின் அளவை 9,000 வரை அதிகரித்துக் கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பொருத்தமான இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்குக் கீழ் அதிகூடிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சிறைச்சாலைகள் திணைக்களத்திற்காகும். அதன்படி, 5,627 மில்லியன் மூலதனச் செலவுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டிடப் புனரமைப்பு, நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வாகனங்களைக் கொள்வனவு செய்தல், மென்பொருள் கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளின் வசதிகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பொறியியல் துறையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சமூதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கீழ் செயற்படும் திட்டங்களின் நிதியியல் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், பொலிஸ், சுகாதார அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களான மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம் மற்றும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களின் பணிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

கொள்முதல் செயன்முறை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே டிஜிட்டல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்குத் தனித்தனி கொள்முதல் செயன்முறையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

gr

ஜெர்மன் விமான நிலையத்தை தகர்க்க முயற்சி

August 25, 2026

விளாடிமிர் புட்டின் ஆதரவுடன் ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தை செம்டெக்ஸ் (Semtex) வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone)

arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க

suresh11

சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

August 25, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்