வரலாற்று ரீதியாக வடக்கு மாகாணம் இலங்கையின் பொருளாதார மையமாகத் திகழ்ந்துள்ளது. அந்தப் பெருமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது-ஆளுநர் 

வடக்கு மாகாணத்தின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை கௌரவிக்கும் இரண்டாவது வர்த்தகச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஜே ஹோட்டலில் நேற்று (19.06.2026) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில்,
‘வரலாற்று ரீதியாக வடக்கு மாகாணம் இலங்கையின் பொருளாதார மையமாகத் திகழ்ந்துள்ளது. அந்தப் பெருமையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. எமது மாகாணத்தை எடுத்துக்கொண்டால் விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய இரண்டு பிரதான துறைகளிலும் மிகப் பெரியளவிலான உற்பத்திகள் காணப்படுகின்றன. ஆயினும், அந்த உற்பத்திகளைப் பதனிடும் வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் எமது மாகாணத்தில் போதுமானளவு இல்லாமையானது ஒரு பின்னடைவாக உள்ளது.
இவ்வாறான காரணங்களால் நெல் மற்றும் வெங்காயச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு உரிய விலையைப் பெறமுடியாமலும், அவற்றைச் சந்தைப்படுத்துவதிலும் பல்வேறு சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான தடைகளைத் தாண்டி, எமது ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்களை அடையாளங்கண்டு, அவர்களின் உற்பத்திகளைச் சர்வதேச ஏற்றுமதிச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனம் வழங்கிவரும் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக, பெண்களை வலுவூட்டுவதற்கும், அவர்களை அபிவிருத்தியில் ஒருங்கிணைப்பதற்கும் இந்தச் சம்மேளனம் முன்னெடுக்கும் அர்ப்பணிப்பான முயற்சிகள் சிறப்புக்குரியன.
உள்ளூர் திறன்களை வளர்த்தல், தரத்தை மேம்படுத்துவதற்கான செயல்முறைப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் மற்றும் பிராந்திய உற்பத்திகளைச் சர்வதேச ரீதியில் காட்சிப்படுத்துவதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அறிவுப் பகிர்வுச் செயற்பாடுகளின் ஊடாகவே நிலையான அபிவிருத்தியை நாம் அடைய முடியும்.இந்த நிகழ்வில் விருதுகளை வென்றுள்ள தொழில்முயற்சியாளர்களாகிய நீங்களே எமது பொருளாதார எதிர்காலத்தின் சிற்பிகள். நீங்கள் வெறுமனே சிறிய அளவோடு நின்றுவிடாது, எதிர்காலத்தில் நாட்டினுடைய மிகப் பெரிய ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.ஏ.முஹம்மட் ஹமிஸ், சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், தொழில்முயற்சியாளர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டச் செயலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
arr

திருட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் யாழில் கைது!

August 25, 2026

யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி

acc

நுவரெலியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து

August 25, 2026

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து நுவரெலியாவிற்கு

Sale

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம்

sss

சுடுகாட்டுக்கு ஏற்பாடு; உயிருடன் வந்த கைதி!

August 25, 2026

நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர்

water cut

களனி ஆற்றில் இரசாயன கழிவுகள் – தனியார் நிறுவனத்தின் அத்துமீறல் – கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது

August 25, 2026

தனியார் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயனகழிவுகள் சுற்றுசூழலில் கலந்ததை தொடர்ந்து களனி ஆற்றின் நீர் தரத்தில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன்

Jail-1-550x344

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க பொலிஸாரிடம் யோசனை கோரல்

August 25, 2026

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்க

suresh11

சுரேஸ் சாலேக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

August 25, 2026

2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்