யோஷித ராஜபக்சவின் கல்வித் தகைமைகளில் முறைகேடு?

இலங்கை கடற்படையின் 45 ஆவது கடற்படை மாணவர் (Cadet) குழுவின் ஆட்சேர்ப்பிற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களப் பாடத்திற்கு சிறப்பு (C) சித்தியை யோஷித ராஜபக்ச பெற்றிருக்கவில்லை.

மேலும் அவரது கல்விச் சான்றிதழ்கள் அடங்கிய ஆவணங்கள் அவரது தனிப்பட்ட கோப்பிலிருந்து (Personal File) திட்டமிட்ட முறையில் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட விசேட கடற்படை விசாரணை குழுவின் தலைவர்: ரியர் அட்மிரல் DWB வெத்தேவ உறுப்பினர்கள்: கொமடோர் USR பெரேரா மற்றும் கொமடோர் MMVB மெதகொட ஆகியோர் கண்டுபிடித்தவை,

அதேபோன்று அக்காலப்பகுதியில் திருகோணமலை கடற்படை அகடமியில் (Naval Academy) பணியாற்றிய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் யோஷிதவின் குழு உறுப்பினர்கள் (Batchmates) வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முழுமையான அறிக்கையிலே மேற்குறிப்பிட்ட தகவல்கள் உள்ளக்கப்பட்டிருந்தன.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது ஒரு நிறைவேற்று அதிகாரியாக Executive Officer) தகுதி பெறுவதற்கு டோரா (Dvora) ரக தாக்குதல் படகுகள் அல்லது பிற கடற்படை கப்பல்களில் கடல் பயிற்சி பெறுவது கட்டாயமாகும்.

எனினும் யோஷிதவின் விடயத்தில் இந்த விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டிருந்தன. யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்த அக்காலப்பகுதியில் யோஷித ஒரேயொரு முறை மாத்திரமே கடல் பயிற்சிக்காகச் சென்றிருந்தார்.

யோஷிதவை எவ்வித ஆபத்தான கடல் பயிற்சிகளிலோ அல்லது கடமைகளிலோ ஈடுபடுத்த வேண்டாம் என அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவினால் பயிற்றுவிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஒரு கடற்படை அதிகாரிக்கு அத்தியாவசியமான பாடங்களான வரைபடம் வாசித்தல் (Map Reading) மற்றும் ராடார் கண்காணிப்பு (Radar Monitoring) போன்ற முக்கியமான நடைமுறைப் பயிற்சிகளை அவர் பூர்த்தி செய்திருக்கவில்லை.

எழுத்துப் பரீட்சைகளில் யோஷிதவை சித்தியடையச் செய்வதற்காக அப்போதிருந்த பரீட்சகர்களுக்கு உயர் மட்டத்திலிருந்து கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் எந்தவொரு பாதுகாப்புப் பிரிவிலும் இரண்டு வருட கடற்படை மாணவர் (Cadet) பயிற்சிக் காலத்தின் போது அனைவரும் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முகாம்களில் தங்கியிருக்க வேண்டும்.

வீட்டிற்குச் செல்வதற்கு மாத்திரமே விடுமுறை வழங்கப்படும். ஆனால் யோஷித ராஜபக்ச பயிற்சிக் காலத்தின் பெரும்பகுதியை கொழும்பிலுள்ள தனது வீட்டிலேயே கழித்தார்.

முகாமில் இருந்த சந்தர்ப்பங்களில் கூட அவர் ஏனைய மாணவர்களுடன் இணைந்து வாழவோ அல்லது அதிகாரிகளின் உணவு விடுதிக்கு (Officers’ Mess) செல்லவோ இல்லை. அவருக்காகவே ஒதுக்கப்பட்ட விசேட கடற்படை பங்களா ஒன்றிலேயே அவர் வசித்து வந்தார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது