யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையே சலே கைது

பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தவே சுரேஷ் சலேயை அரசாங்கம் கைது செய்திருக்கிறது. இது யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறுகிய காலத்தில் நீதியை நிலைநாட்டுவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அஅரசாங்கத்துக்கு அரசாங்கத்துக்கு 16 மாதங்கள் கடந்தும் அதனை செய்துகொள்ள முடியாமல் போனது. கடந்த ஏப்ரல் மாதம் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாகவே ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை செய்துகொள்ள முடியாமல் போனதால், தற்போது இந்த ஏப்ரல் மாதமாகும்போது, இதுதொடர்பில் ஏதனையாவது மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது உளவுத்துறையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயை கைது செய்திருக்கிறார்கள்.

சுரேஷ் சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும், கத்தோலிக்க மக்களையும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார். பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விடயத்தை ஜனாதிபதி தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். யாழ்ப்பாணாத்துக்கு சென்றும் அதனையே மேற்கொண்டிருந்தார்.

அதேபோன்று தற்போது நிலக்கரி மோசடி தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறைப்பதற்கும் ராஜபக்ஷ் அரசாங்கத்துக்கு ஆதரவாக மக்கள் தற்போது ஒன்றுசேர்வதை தடுப்பதற்காகவுமே இந்த கைது இடம்பெற்றிருக்கிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜனாதிபதிக்கு நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போயிருப்பதால், இந்த தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டிய ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோரை பயன்படுத்தியே சலே கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இவர்கள் இரண்டு பேருக்கும் எதிராக வழக்கு தொடுக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாரா ஜெஸ்மின் தப்பிச்செல்லும்போது கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்பாேதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர. அதனால் அருண ஜயசேகர, ஷானி அபேசேகர,ரவி செனவிரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான இப்ராஹிமுடைய மகன்களே குண்டுதாரிகளாக இருந்தனர். ஆகியோரை வைத்துக்கொண்டே இந்த கைது இடம்பெற்றுள்ளது. சலேயை கைது செய்துள்ளதன் மூலம் ஜனாதிபதி தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்தி இருக்கிறது. எந்தவொரு நாட்டினதும் அரச தலைவர் தனது அரச புலனாய்வு துறையை பலவீனப்படுத்த முயற்சிப்பதில்லை.

ஆனால் இந்த ஜனாதிபதியும் அரசாங்கமும் பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தனது அரசை, புலனாய்வுத்துறை பலவீனப்படுத்தி வருகிறார்கள். இந்த கைதானது யுத்தத்தை வெற்றிகொள்ள உயிர் தியாகம் செய்தவர்களின் தாய் தந்தையர்கள் மற்றும் உறவினர்களின் உள்ளம் புண்படும் செயலாகும். யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை, புலனாய்வுத்துறையை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாகும் என்றார்.

sri

தியாகத்தாய் அன்னை பூபதி போன்றும் நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்

ka

கரந்தெனிய ராஜு” 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை

April 18, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “கரந்தெனிய ராஜு” எனப்படும் பாதாள உலகக் குழு சந்தேக நபர், மேலதிக

v

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்