முன்னாள் உலக சனூக்கம்பியன் கிரீம் டாட், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்காக இன்று நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
49 வயதான இவர், 1993 முதல் 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு சிறுவர்கள் மீது ஆபாசமாகவும் தகாத முறையிலும் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறுமி ஒருவர் தொடர்பான குற்றச்சாட்டில், அவர் தகுதியற்ற முறையில் தொட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டில் உலக பட்டத்தை வென்ற டாட், ஒரு சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தனித்தனியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டில், டாட் பாலியல் கருத்துக்களைத் தெரிவித்ததாகவும், குளியலறைக்குள் நுழைந்து அவர் குளிப்பதைப் பார்த்ததாகவும், அந்தச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.