முச்சக்கரவண்டி சாரதி தற்கொலை!

மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில் ஏற்பட்ட தர்க்கம் மற்றும் அது தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு அஞ்சியே இவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதிக்குச் சொந்தமான வீடொன்று தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.

அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.

குறித்த பொலிஸ் முறைப்பாடு மற்றும் விசாரணை தொடர்பாக தனது கணவர் மிகுந்த கவலையுடனும் பயத்துடனும் காணப்பட்டார் என்று உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பொலிஸ் விசாரணைக்குச் செல்ல வேண்டியிருந்த அச்சம் காரணமாக அவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

imf

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியம் கரிசனை

March 21, 2026

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய

ce

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

March 21, 2026

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

death

முச்சக்கரவண்டி சாரதி தற்கொலை!

March 21, 2026

மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று தீப்பற்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகைக்கு வழங்கப்பட்ட வீட்டில்

kemunu

நாட்டில் தனியார் பஸ் சேவை முடங்கும் அபாயம்

March 21, 2026

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு இதுவரை முறையாக சீர்செய்யப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு

gff

வாத்துவையில் ரயில் – கார் மோதி விபத்து

March 21, 2026

வாத்துவ பகுதியில் உள்ள ரயில் கடவுப்பாதை ஒன்றில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியினர் இருவர் காயமடைந்துள்ளனர். மருதானையில்

5

நாட்டின் 9 மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் கிளைகள்!

March 21, 2026

நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் புதிய கிளைக் காரியாலயங்களை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

dd

பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் செயற்திட்டம்

March 21, 2026

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை

ve

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை!

March 21, 2026

675க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா பேரழிவு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ்

bi

கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிள் விபத்து

March 21, 2026

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில்

photo-collage.png

இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம்; புத்தளம் இளைஞர் யுவதிகள் வடமராட்சியில்

March 21, 2026

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்படும் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டம் கீழ் நேற்று முன்தினம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்றில்

Peel

மிசிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்துக்கள் குறித்து உதவியை நாடும் காவல் துறை

March 21, 2026

பீல் பிராந்தியம் – 11 பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு (CIB) அதிகாரிகள், மிசிசாகாவில் இடம்பெற்ற இரண்டு தீ வைத்த

WhatsApp Image 2026-03-21 at 16.55.44 (1)

பிராம்ப்டனில் மாநகராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு விளம்பரதாரர்களுக்கான தகவல் அமர்வு

March 21, 2026

​​பிராம்ப்டன், மாநகராட்சி விவகாரங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சகத்துடன் இணைந்து, பிராம்ப்டன் நகரம் 2026 மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள்