மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வசித்து வந்த வீட்டிலும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் பதிவாகவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கை செய்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த வீட்டிற்குள் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் ஊடாக நுழைய முடியும் என்ற போதிலும், சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்ததில் 2026ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதிக்கும் 2026ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநபர்கள் எவரும் அந்த வீட்டிற்குள் நுழையவில்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, இறந்துபோனவர் வசித்து வந்த வீட்டிலிருந்த சிசிடிவி உபகரணங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அந்த சிசிடிவி உபகரணங்களிலும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீதவான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பொலிஸார், மரணமடைந்தவர் வசித்து வந்த வீட்டிலும், மரணம் சம்பவித்த வீட்டிலும் இருந்த சிசிடிவி கெமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

அதன்படி, அந்த சிசிடிவி கெமராக்களைப் பொருத்திய நிறுவனத்தின் பொறியியலாளர் இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மரணமடைந்தவர் வசித்த வீடு மற்றும் மரணம் சம்பவித்த வீடு ஆகியவற்றின் சி.சி.டி.வி கெமரா கட்டமைப்புக்குரிய டி.வி.ஆர் இயந்திரங்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து, அவற்றை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம்​சமர்ப்பித்து அறிக்கை கோருவதற்கு அனுமதி வழங்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், மரணம் சம்பவித்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்து வகைகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி அறிக்கை கோர நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்விடத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றில் அடையாளம் தெரியாத இரு வேறு வகையான மருந்து மாத்திரைகள் இருந்ததாகவும், அதில் ஒரு வகையான மாத்திரைகள் 9ம், மற்றுமொரு வகையான மாத்திரைகள் 11ம் இருந்ததாகவும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து விபரித்த பொலிஸார், மரணமடைந்தவருக்கும் வீட்டின் பணியாளர்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள கடந்த தினத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்த போதிலும், போதிய கால அவகாசம் இன்மையால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும், அதனால் மீண்டும் சத்தியக்கடதாசிகளைச் சமர்ப்பித்து அதற்கான உத்தரவுகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீதவான் பொலிஸாரிடம், “இந்த சாட்சி விசாரணையின் போது மரணமடைந்தவருக்கு பிணை நின்ற இருவர் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. அவர்களை சாட்சியமளிக்க அழைக்கவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பொலிஸார், “அவர்களிடம் இன்னும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியாமல் போனது” எனத் தெரிவித்தனர்.

மீண்டும் பொலிஸாரை நோக்கி நீதவான், “வாக்குமூலங்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்பதற்காக சாட்சிகளை அழைக்காமல் இருக்க முடியுமா? அவர்களையே முதலில் சாட்சியமளிக்க அழைக்க வேண்டும். வாக்குமூலங்களைப் பதிவு செய்யாவிட்டால் எவ்வாறு விசாரணை நடத்துவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

அச்சமயம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி, “இந்த இரு பிணையாளர்களும் விளக்கமறியலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த நீதவான், “விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது அந்த இரு பிணையாளர்களும் அல்லவே. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் இலகுவானதே. என்னிடம் இருந்து உத்தரவொன்றைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்ய முடியும்” என்று கூறினார்.

இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காகப் பல சாட்சிகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அழைத்திருந்தனர்.

அது குறித்து கருத்துத் தெரிவித்த நீதவான், “இன்று சாட்சியமளிப்பதற்காகப் பல பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரினதும் சாட்சியங்களை இன்று பதிவு செய்ய முடியாது. அவசியமற்றவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். சாட்சிகளுக்குள் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர். அவர்களைத் தடுத்து வைப்பது பொருத்தமற்றது” எனக் குறிப்பிட்டதுடன், இந்த மரணம் தொடர்பான சாட்சி விசாரணைகள் பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை