மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை வழங்குவதில்லை. இதன் மூலம் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளி்க்கிழமை (12) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மத்திய கிழக்கில் இடம்பெறும் யுத்தம் எமது நாட்டுக்கு போன்று உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உலக நாடுகள் அதனை சமம்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்தும் இருக்கிறது. மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு உலக நாடுகளில் நூற்றுக்கு 28 வீதமாகவே இருக்கிறது. ஆனால் இலங்கையில் எரிபொருள் விலை நூற்றுக்கு 48 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேபோன்று இந்த வருடத்துக்குள் எமது நாட்டில் 6 தடவைகள் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அந்த நாடுகளில் தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக மே மாதம் 30ஆம் திகதி எமது நாட்டில் எரிபொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்படும்போது, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 37ரூபா குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நாங்கள் அதிகவிலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

எதிர்வரும் 5 மாதங்களுக்கு எரிபொருளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களிடம் போதுமானளவு கையிருப்பு இருப்பதாக ஜனாதிபதி மார்ச் மாதம் 5ஆம் திகதி தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 3ஆம் திகதி ஒரு பீப்பாய் டீசல் 121 டொலருக்கு எடுத்திருக்கிறது. மார்ச் மாதம்20ஆம் திகதி 228 டொலருக்கு எடுத்திருக்கிறது. மார்ச் மாதம் 21ஆம் திகதி 345 டொலருக்கு எடுத்திருக்கிறது. இவ்வாறு அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்திருக்கிறார்கள். அதனாலே எரிபொருட்களின் விலை இந்தளவு அதிகரிக்கப்பட காரணமாகும்.

அதேபோன்று தரமற்ற நிலக்கரி கொள்வனவு காரணமாக இரண்டு கப்பல் எரிபொருள் மின் உற்பத்திக்காக வழங்க வேண்டி ஏற்பட்டிரு்க்கிறது. முகாமைத்துவ பிரச்சினையாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் இவ்வாறான நெருக்கடி நிலைமை ஏற்படும்போது எவ்வாறு முகாமைத்துவம் செய்துகொள்வது என்பது முக்கியமாகும். மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக எங்களுக்கு எரிபொருள் கொள்வனவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றே விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் ஒரு பீப்பாய் எரிபொருள் 345 டொலருக்கே கொள்வனவு செய்திருக்கிறது.

அதேநேரம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை வழங்குவதில்லை. அதனால் தகவல் அறியும் உரிமையை செயலிழக்கச்செய்திருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் இவர்கள் தகவல்களை மறைக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல்களை பெற்றுத்தருவதாக தெரிவித்த அரசாங்கம், அவ்வாறான அரசாங்கம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என்றார்.

en

உலக கிண்ண மகளிர்; இலங்கையை வென்றது இங்கிலாந்து

June 13, 2026

உலக கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிப் பெற்றுள்ளது.

iran

மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் – ஈரான் அறிவிப்பு

June 13, 2026

ஈரானில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் செய்ட் அப்பாஸ் அராக்சி

ha

நாட்டின் ஆரம்பப் பாடசாலைகளுக்கு பொதுவான மாதிரித் திட்டம்

June 13, 2026

மாணவர் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் செயல்வழிக் கல்வி ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கிய பொதுவான மாதிரி ஒன்றின் அடிப்படையில், நாட்டின்

kaveendran

கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் – சுரேஷ் சலேயை விடுவிக்கவே கூடாது

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில்

mujipur

மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கின்றது – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

June 13, 2026

வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை

Walk-1-1-1-2-3

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

June 13, 2026

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால்

thum

முன்கூட்டியே தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் – துமிந்த திஸாநாயக்க

June 13, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான துல்லியமான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு

5Y6OSMTX3FCXBO26E4SV6JCRGM

உலகக் கோப்பை கால்பந்து: கானா அணி நட்சத்திர வீரர் தாமஸ் பார்ட்டி கனடாவுக்குள் நுழைய தடை!

June 13, 2026

டொராண்டோ: கானா நாட்டின் முன்னணி கால்பந்து மத்தியக்கள ஆட்டக்காரரான (Midfielder) தாமஸ் பார்ட்டி (Thomas Partey) கனடாவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு

DQM2IQB3OZC4FOEXASINC2UA5U

டொராண்டோ மைதானத்தில் பரபரப்பு: காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய போஸ்னியா நாட்டு ரசிகர்கள் இருவர் கைது

June 13, 2026

டொராண்டோ: டொராண்டோ மைதானத்தில் (Toronto Stadium) இன்று மதியம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாக

FPNHWZZVJRAW7DCU3BD4HN267M

டொராண்டோ ஓடும் ரயிலில் அரங்கேறிய இனவெறித் தாக்குதல்: பெண் சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 13, 2026

ஜூன் 12, 2026 டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள ‘கென்சிங்டன் மார்க்கெட்’ (Kensington Market) பகுதிக்கு அருகே, ஓடும்

3BIJM6DOAVBKRM6BHX4NTYTQLM

டொராண்டோ அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 18 வயது இளைஞன் கைது;

June 13, 2026

தி கனடியன் பிரஸ் ஜூன் 12, 2026 டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிச்

aal

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 2026 க.பொ.த (உயர்தர) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள இணைப்பின் ஊடாகக் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளில் இணையவழி (Online) விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) முதல் விண்ணப்பங்கள் கோரப்படும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இம்மாதம் 22 ஆம் திகதி விண்ணப்பிப்பதற்கான இறுதித் நாளாகும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

June 12, 2026

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவித்தல்