பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தல் செயற்திட்டம்

இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

2025 டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது, ‘டித்வா’ சூறாவளிக்குப் பிந்தைய மறுசீரமைப்பிற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை அறிவிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வினய் தாக்கூர் தலைமையிலான Bhaskaracharya Institute of Space Applications and Geoinformatics (BISAG) பிரதிநிதிகள் குழு மார்ச் 9 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது.

அவர்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்துடன் இணைந்து, ‘PM Gati Shakti’ திறந்த மூல கட்டமைப்பின் அடிப்படையில் இயங்கும் ஒரு புவியியல் (Geospatial) தளத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தளம் பேரிடர் தாக்க மதிப்பீடு செய்வதோடு மட்டுமல்லாது, அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகவும் செயல்படும்.

மேலும், இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான Centre for Development of Telematics (C-DoT) பிரதிநிதிகள் குழு மார்ச் 16 முதல் 20 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, மொபைல் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப எச்சரிக்கை (Early Warning) முறைமைக்கான Proof of Concept-ஐ வெற்றிகரமாக காட்சிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, Geological Survey of India சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நிலச்சரிவு எச்சரிக்கை முறைமைகள் மற்றும் புவியியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொண்டனர். அவர்கள் தேசிய கட்டிட ஆராய்சி நிலைய அதிகாரிகளுடனும் சந்தித்து சிறந்த நடைமுறைகள் குறித்து பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்புகளின் நிறைவாக, பேரிடர் தாக்க மதிப்பீட்டு தளமும், மொபைல் அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறைமையும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எரங்க வீரரத்ன, ஹன்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

இரு நாடுகளும், எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேலும் மேம்படுத்தி, திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சிறந்த நடைமுறைகள் பகிர்வு ஆகியவற்றின் மூலம் பேரிடர் முகாமைத்துவ திறன்களை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்