புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!

வட இந்திய மாநிலமான அசாம் – தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான அசாம் கண பரிஷத் 26 தொகுதிகளிலும், போடோ லேண்ட் மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த மாநிலத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராய் ஜோர் தள் 16 தொகுதிகளிலும் , அசாம் ஜாதிய பரிஷத் கட்சி 10 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றது.‌

இந்த இரண்டு கூட்டணியை தவிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோட்சா கட்சி 21 தொகுதிகளிலும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 14 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்தனர்.

தென்னிந்திய மாநிலமான கேரளம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் குதித்திருப்பதால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 95 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பாஜக 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாஜக கட்சிக்கு வாக்காளர்கள் இடத்தில் ஆதரவு இருந்தாலும் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் நேரடியான மோதல் நடைபெறுகிறது.‌ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டனர். பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பங்கு பற்றி தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிக்கும் நேரடியான போட்டி நிலவுகிறது. இங்கு புதிதாக தமிழக அரசியல் களத்தில் இறங்கி பாரிய அதிர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 30 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத கட்சியின் பிரபலங்கள் பலர் பல தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள். விஜய், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி நிகழ்வுகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் மூலம் தங்கள் கட்சிக்கும், கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டினர்.

மூன்று மாநிலங்களிலும் பொதுத் தேர்தலுக்காக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அசாம், கேரளம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைக்கான பொது தேர்தலில் மக்கள் யாரை தெரிவு செய்வார்கள் என்பது எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அதிகாரபூர்வமாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.