முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் அண்மையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதுக்குடியிருப்பு வணிகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்கென கட்டடம் இல்லாதது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், புதுக்குடியிருப்பிலிருந்து கொழும்புக்கான ஏசி பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.