தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக தேர்தல் களத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கொள்ள உள்ளது.வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார், அறிக்கை அரசியல் என வைக்கப்பட்ட விமர்சனத்தை உடைக்கும் வகையில் மக்கள் சந்திப்பை விஜய் முன்னெடுத்தார். கடந்த ஆண்டு கரூர் சம்பவம் முதல் ஜனநாயகன் தணிக்கை சான்று வரை தொடர்ந்து வழக்குகளில் சிக்கி வருகிறார்.

இது அவருக்கு நெகட்டிவாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், அதனை தகர்த்தெறியும்படி இருந்தது தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம். தொடர்ந்து மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார் விஜய்.இதற்கிடையே, கட்சித் தொடங்கிய போது தவெகவுடன் கூட்டணி அமைத்தால்,ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று கூறினார். இதில், விசிக இணையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குண்டை தூக்கி எறிந்தது. இதனால், திமுக அதிர்ச்சி அடைந்தது. மறுப்புறம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.

இதனால், திமுகவை விட்டு வெளியேறி காங்கிரஸ் – தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சொன்ன போலிட்டிகல் பார்ம் வொர்க்காமல் போனது. இதனால் விஜய் போட்டு இருந்த கூட்ட்ணி கணக்கும் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்,விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, ஒட்டு மொத்த தமிழகத்தின் பார்வை விஜய் மீது.காரணம் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறியது.இது அவரது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சென்னை நடந் த பிரபல தயாரிப்பாளர் நிகழ்ச்சில் விஜய் கலந்துக் கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

.இதனால்,சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்லைவர்கள் மற்றும் நடிகை கருத்து தெரிவித்து வந்த நிலையில், இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனும் கூறியிருந்ததார். இது பேசுப்பொருளானது. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :நடிகர் விஜயின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எந்தவிதமான கருத்தையும் வெளியிடவில்லை. அதேபோல் அவரது அரசியல் வருகை பற்றியும் நான் கருத்து தெரிவிக்கவில்லை.

விஜயை நான் மரியாதையுடன் நடந்து கொள்கிற, அமைதியான இணை நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறேன். மேலும் அவரது தாயாரைப் பற்றியும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உள்ளது. எனக்கு தெரிந்த தகவல் அதுவரை மட்டுமே.

சமீபத்தில் நான் மேடையில் பேசிய சில வரிகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, அவை விஜயின் அரசியல் வருகையுடனும் தற்போது அவரது தனிப்பட்ட விஷயங்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளிதழ் என்னிடம் கருத்து கேட்டபோது, தனிப்பட்ட விஷயங்களையும் அரசியல் செயல்பாடுகளையும் மக்கள் தனித்தனியாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்றும், தேர்தல் காலம் என்பதால் இந்த விஷயத்திற்கு தேவைக்கு மீறிய கவனம் கிடைக்கிறது போல தெரிகிறது என்றும் மட்டுமே நான் கூறினேன்.

மேலும் ஒரு விஷயத்தைச் சேர்த்துக் கூற விரும்புகிறேன். பெண்களின் உரிமைகள் குறித்து உண்மையாகவே அக்கறை இருந்தால், சமூகத்தில் இன்னும் பல பெண்கள் வன்முறை மற்றும் அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு சட்ட உதவி, பொருளாதார பாதுகாப்பு, சில நேரங்களில் அன்றாட உணவுக்கூட இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கும் நம்முடைய கவனமும் ஆதரவும் சம உரிமை கிடைக்க வேண்டும்.எனவே, எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும் தவறான புரிதலை சரிசெய்யவும் இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்!

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்