திமுக – காங்கிரஸ் கூட்டணி கை கொடுக்குமா? காலை வாருமா காங்கிரஸ்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னமும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகப் போட்டியிட்டு வென்று கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே அணியாகச் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென மாணிக்கம் தாகூர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று குரல் எழுப்பினர்.

இதனால், உறுதியாக இருப்பதாகக் கருதப்பட்ட திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. என்றாலும், இதுபற்றித் திமுக தலைவர்கள் யாரும் பெரிதாக எதிர்வினையாற்றவில்லை.

கூட்டணி நீடிக்குமா அல்லது கழன்று விடுமா என்ற சூழலில் கடந்த டிச. 3 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணி இன்னும் வலுவாகத்தான் இருக்கின்றது என உறுதிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையே, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆகாது எனத் திட்டவட்டமாக நிகழ்ச்சியொன்றில் கூறிவிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்னால் செய்யும் இதுபோன்ற ‘ஸ்டண்ட்கள்’ கடும் பின்னடைவையே கொடுத்திருக்கின்றன. இந்தப் போக்கால் காங்கிரஸ் மட்டுமின்றிக் கூட்டணிக் கட்சிகளும் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கின்றன.

மத்தியில் ஆட்சியைப் பறிகொடுத்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், மக்களவைத் தேர்தலிலும் இதேபோன்ற வேலைகளை காங்கிரஸ் செய்திருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒருங்கிணைந்தும் அப்போதும் மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏற்பட்ட தொகுதிப் பங்கீட்டு பிரச்சினையால், ‘நீ உன் வேலையைப் பார்; நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ எனத் தனியாக வேட்பாளர்களை அறிவித்து தனது ஸ்டைலில் போட்டியிட்டு வென்றார் முதல்வர் மமதா. மேற்கு வங்கத்தில் திரிணமூல் 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை காங்கிரஸ் – திமுக இடையிலான தேர்தல் கூட்டணி நீண்ட காலமாக நீடித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் துவங்கி 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை காங்கிரஸும் திமுக-வும் ஒன்றாகவே இணைந்து போட்டியிட்டன.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, அத்தனை இடங்களிலும் தோற்றது.

பிறகு, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து இரு கட்சிகளும் இணைந்தே தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. இதுவரை கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, பொதுக்கூட்டம், இளைஞர் அணி மாநாடு, மகளிர் மாநாடு என எதையாவது கூட்டி பார்த்திருக்கிறோமா? தேர்தல் வந்தால் ஏதாவது ஒரு கூட்டணியில் பல்வேறு இழுபறிக்குப் பின்னர் தேர்தலை வேண்டா வெறுப்பாக சந்திப்பதைத்தான் காண முடிகிறது.

அதேவேளையில், ‘இறுமாப்புடன் இருநூறு வெல்வோம்’ எனத் தொடர்ந்து கூறிவரும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் அதிக இடங்களை ஒதுக்கிவிட்டால் பெரும்பான்மைக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இழுபறி தொடர்ந்து வருகிறது.

கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் 173 இடங்களில் போட்டியிட்டு 133 இடங்களில் மட்டும் திமுக வென்றது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 இடங்களை வென்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைந்த பின்னரும் அதிமுகவுக்கான தனி செல்வாக்கு தொடர்ந்தாலும் பாஜகவுக்கு எதிரான மனநிலை, அதிமுகவுக்கான பின்னடைவாகக் கூறப்படுகிறது. அதிமுக – பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறக் கூடிய வலுவான கூட்டணியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி கருதப்படுகிறது.

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்