தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல முயற்சிகளைச் செய்கின்றது!

பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. அதை செயல்முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிரூபித்து வருகின்றது என மே தின வாழ்த்துச் செய்தியில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மே தின தினத்தை முன்னிட்டு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல்வேறு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவை வெறும் அரசியல் வாக்குறுதிகளாக அல்லாமல் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பள உயர்வு, நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு நீதி வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட படிமுறையாகும்.

தலைமுறைகள் கடந்தும் உழைத்த அந்த மக்களின் குரல் இறுதியில் கேட்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்த அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகும்.

அதேபோல், நாட்டின் அந்நியச் செலாவணியின் முதுகெலும்பாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்றொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையும் மறக்கப்படவில்லை. கடலில் போராடும் அந்த உழைப்பாளிகளின் வாழ்வாதாரம், தொழில் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களை மேம்படுத்தும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் மே தினம், வெறும் நினைவுநாளாக அல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போராட்ட மேடையாக அமையவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியால் நாடு முழுவதும் 21 இடங்களில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலப்பரப்பில் நடைபெறவுள்ள கூட்டங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

கடந்த காலங்களில் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடியபோது, அவர்களை துப்பாக்கிச் சூடு, தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் ஒடுக்கியவர்கள் இன்று தொழிலாளர் நலன் குறித்து பேசுவது மிகப் பெரிய பரிகாசமாகும்.

அன்று தொழிலாளர்களின் குரலை அடக்கத் தோட்டாக்களைப் பயன்படுத்தியவர்கள், இன்று தம்மை மீட்பர்களாக காண்பிக்க முற்படுகின்றனர். இத்தகைய போலி வேடங்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.

அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, உண்மையான தொழிலாளர் விடுதலையை நோக்கி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

உழைக்கும் மக்களின் கரங்கள் ஓங்கட்டும்! வியர்வையின் மதிப்பு உயரட்டும்! அனைத்துப் பாட்டாளி வர்க்கத்தினருக்கும் எனது செம் மேதின வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்