சர்வதேச தொழிலாளர் தினம்; கறுப்பு நாளாக முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

திருகோணமலை – பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் விவசாயிகள், சர்வதேச தொழிலாளர் தினமான இன்று (01.05.2026), கறுப்பு ஆடை அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் முத்துநகர் சந்தி அருகே இடம்பெற்றது.

கடந்த பல வருடங்களாகத் தமது வயல் காணிகளுக்கான தீர்வினைக் கோரிவரும் இவ்விவசாயிகள், இம்முறை மே தினத்தைக் கறுப்பு நாளாகக் கருதி வீதியில் இறங்கினர். விவசாய காணிகளைச் சூறையாடி, தனியார் நிறுவனங்களுக்குச் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக வழங்கியதைக் கண்டித்து இந்த விழிப்புணர்வுப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“எமது நிலம் எமக்கு வேண்டும்”, “விவசாயிகளுக்கு நீதி வேண்டும்”, “நலிவடைந்த உழவர்களுக்கு IMF நீதியைப் பெற்றுத் தா”, “முத்துநகர் விவசாய காணிகளை மீண்டும் ஒப்படை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு 50-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் குமுறல்:

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினர்:

“அன்பான உறவுகளே, இன்று மே முதலாம் திகதி – உலகத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த செந்நாள்! ஆனால், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசானது முத்துநகர் விவசாயிகளின் நிலங்களையும் உரிமைகளையும் பறித்து, இந்நாளை எமக்குக் கறுப்பு நாளாக மாற்றியுள்ளது.

இலங்கையின் ஆளுகை மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து மதிப்பீடு செய்த சர்வதேச நாணய நிதியம் (IMF), முறையான ஆளுகை இல்லாவிடில் பொருளாதார வளர்ச்சி நிலைக்காது என்பதை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக நிலைத்தன்மை பேணப்பட வேண்டும் என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால், இன்றைய அரசு நில உரிமையைப் பெரும்பான்மைக்கும், கண்ணீரைச் சிறுபான்மைக்கும் பரிசாக வழங்குகிறது. கடந்த 55 வருட காலத்தில் பல ஜனாதிபதிகளை நாங்கள் கண்டுள்ளோம். அவர்கள் எமக்கு இத்தகைய நெருக்கடிகளைத் தந்ததில்லை. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் விவசாய மானியங்கள் எமக்குக் கிடைத்தன. ஆனால், இந்த அரசு எம்மை அவமானப்படுத்தி, எமது பூர்வீக நிலங்களிலிருந்து அராஜகமாக வெளியேற்றியுள்ளது.

முந்தைய அரசுகளுக்கு எதிராக எம்மைத் தூண்டிவிட்டு, எமக்காகப் போராடுவதாகக் கூறி நில உரிமையைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதியளித்த அருண் ஹேமச்சந்திர போன்றவர்கள், இன்று ஆட்சிக்கு வந்ததும் அதே ஏகாதிபத்தியச் சக்திகளிடம் எமது வயல் நிலங்களைத் தாரைவார்க்கிறார்கள். இது கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு ஒப்பானது. மேலும், அவர் எமது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தவறான தகவல்களை வழங்கி வருகின்றார்.

கந்தளாயில் 11,000 ஏக்கர் அரச காணிகளைப் பெரும்பான்மை மக்களுக்கு வழங்கிய அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி இதுதான்: ‘முத்துநகர் விவசாயிகள் 1,200 ஏக்கரில் கடந்த 55 வருடங்களாகக் கஞ்சாவா பயிரிட்டார்கள்?’

IMF அதிகாரிகளே! எங்கே இருக்கிறது சமூக நிலைத்தன்மை? ஜனநாயக ரீதியாகப் பலமுறை கோரிக்கை விடுத்தும் எமக்கு நீதி கிடைக்கவில்லை. ஆகவே, வங்குரோத்து நிலையில் இருந்த இலங்கையை மீட்க முயற்சிப்பது போல, கண்ணீரில் வாழும் முத்துநகர் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுங்கள். அரசு செய்யாததை IMF செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

காஸா, பாலஸ்தீனம் மற்றும் ஈரானுக்காகக் குரல் கொடுக்கும் உங்கள் நேர்மை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, உங்களோடு வாழும் சக சகோதரர்களாகிய எமக்கும் கொஞ்சம் குரல் கொடுங்கள். எமது ஒற்றுமையே எமது பலம்!”

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்