தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, வியாழக்கிழமை (05) அன்று நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த மாதம் 23ஆம் திகதி ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் (பினவறை) வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 24 ஆம் திகதி சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியாக இழுக்கு ஏற்படுத்தியதாக வைத்தியசாலை அதிகாரிகளால் சந்தேகம் வெளியிடப்பட்டது. இச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பலத்த கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பல நாட்களாகியும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எவ்வித சட்டரீதியான அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனை எதிர்த்து செவ்வாய்க்கிழமை (03) அன்று வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்திருந்தது. எனினும், இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், வியாழக்கிழமை (05) அன்று நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களிலும் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை, வெளி ஓயா, பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா, கந்தப்பளை, கொத்மலை மற்றும் இரம்பொடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருந்திரளான இளைஞர் – யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது சம்பந்தப்பட்ட மூன்று ஊழியர்களும் உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்கள் மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்கள் இலங்கையின் எப்பாகத்திலும் இனி நடைபெறாத வண்ணம் அரசாங்கம் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4EME22FUCUFXLKWCLCX26AJ45E

‘இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்’: மழலையர் பள்ளி பாலியல் வன்கொடுமை விசாரணையில் மிசிசாகா நபர் மீது வழக்கு

May 1, 2026

நயாகரா பிராந்தியத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் (Daycare) நடந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிசிசாகாவைச் சேர்ந்த ஒரு

N4GRQRXYBFAE3OJP7ZBTM4PGXA

GTA யூத வழிபாட்டுத் தலங்களில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

May 1, 2026

GTA (Greater Toronto Area) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களை (Synagogues) இலக்கு வைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்

anura 2026

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு அவசியமாகலாம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 1, 2026

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றமை காரணமாக நாட்டின் எரிசக்தி துறையில்

1777567784-death-6

இணைய மோசடி தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி-மரணத்திற்கான காரணம் வெளியானது

May 1, 2026

ஒரு இணைய வழி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதி

1200-675-24723167-thumbnail-16x9-velmurugan (1)

“கத்தி பட ரிலீஸின் போது விஜய் மேலாளர் பேரம் பேசினார்” – வேல்முருகன் கிளப்பிய அதிரடிப் புகார்!

May 1, 2026

சென்னை: எடிசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

PYHMKVVG7YLHLX7FSBZNJG3LPI

அகதிகள் இனி மருத்துவச் செலவுகளின் ஒரு பகுதியைத் தாங்களே ஏற்க வேண்டும்: மருத்துவர்கள் கவலைப்படுவது ஏன்?

May 1, 2026

டொராண்டோ — மத்திய அரசின் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அகதிகள் இனி தங்களின் மருந்துச் சீட்டுகள், மனநல

1200-675-25564142-thumbnail-16x9-tvk-aadhav-arjuna

“தோல்வி பயத்தால் தவெக அலுவலகத்தை எரித்துள்ளனர்” – ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு!

May 1, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால்

bef4d650-71a3-11f0-a82a-7bee61c7c107.jpg

“நாட்டின் கட்டமைப்புக்குத் தொழிலாளர்களே அஸ்திவாரம்” – ஓ.பன்னீர்செல்வம் மே தின வாழ்த்து!

May 1, 2026

சென்னை: சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொழிலாளர் பெருமக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

l35720250915134907

“வாக்கு எண்ணிக்கையில் திமுக தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு; பாமக முகவர்கள் விழிப்புடன் இருங்கள்” – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

May 1, 2026

சென்னை: மே 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின்

y1-1744036252

“தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்துவதா?” – சிலிண்டர் விலை உயர்வுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

May 1, 2026

சென்னை: மே மாதத்தின் முதல் நாளான இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையேயும் வணிகர்களிடையேயும் அதிர்ச்சியை

dailythanthi_2026-05-01_5pdthyju_Untitled-3

“அன்புச் சகோதரர் அஜித்குமாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” – எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சி!

May 1, 2026

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமார் இன்று தனது 55-வது

_117612836_8f184d2f-d418-47e4-927c-6638897dc3b5.jpg

“உழைப்பு இன்றேல் உயிர் இல்லை உயர்வில்லை” – கமல்ஹாசன் உருக்கமான மே தின வாழ்த்து!

May 1, 2026

சென்னை: சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தொழிலாளர்களின் மகத்துவத்தைப் போற்றித் தனது