“டித்வா” புயல் குறித்த முன்னெச்சரிக்கை அரசு புறுக்கணிப்பு?

கண்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு செவ்வாய்க்கிழமை (15) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“டித்வா” புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் உரிய அரச அதிகாரிகளால் உரிய நேரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அந்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இம்மனுவை ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆதரவுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் ஜனக் டி சில்வா மற்றும் நீதியரசர் அச்சுல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, 2025 நவம்பர் 13 ஆம் திகதியிலிருந்து இலங்கையின் வானிலை முன்னறிவிப்புகளைக் கொண்ட பிபிசி (BBC) ஆவணப்படம் மற்றும் ஸ்லைடுஷோ (slideshow) ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மனுதாரர் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார்.

மனுதாரர் தமது மனுவில், பிரதிவாதிகள் சில தகவல்களை வெளிப்படுத்த உத்தரவிடுமாறு கோரியுள்ளார். இதற்குப் பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசாங்கம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இம்மனு தொடர்பிலான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது. தேவைப்படின் மனுதாரர் மட்டுப்படுத்தப்பட்ட மறுப்புரைகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதென இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி, அமைச்சரவை, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது அவர் இந்த வழக்கைச் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றும் போது மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரையின்படி சட்டமா அதிபர் முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.

2025 நவம்பர் 12 ஆம் திகதியே வளிமண்டலவியல் திணைக்களம் புயல் உருவாகப்போவது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். புயல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், கொத்மலை போன்ற முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை முன்கூட்டியே வெளியேற்றுதல் உள்ளிட்ட எவ்வித முன்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், கம்பளை போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைக் குறைத்திருக்க முடியும் என்றும், உயிர்ச்சேதம் மற்றும் சொத்துச் சேதங்களை பெருமளவு தவிர்த்திருக்க முடியும் என்றும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் தலைவராகப் பணியாற்றுவதாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவையினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

கண்டி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைந்திருந்த தனது சட்ட அலுவலகம், புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் முற்றாகச் சேதமடைந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனது தொழில்முறை கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான கணினித் தரவுத்தளம் முழுமையாக அழிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை விவகாரங்களில் பிரதிவாதிகளின் செயற்பாடுகள், அக்கறையற்ற தன்மை மற்றும் கடமையின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும், இது சட்டபூர்வமான மற்றும் அரசியலமைப்பு ரீதியான கடமைகளின் மீறல் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரியவுடன் சட்டத்தரணிகளான நிசல் பெர்னாண்டோ, கல்பனி திசாநாயக்க மற்றும் ஹேஷானி பொன்சேகா ஆகியோர் முன்னிலையாகினர்.

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்

san

நிதி மோசடி; சாந்த பண்டாரவின் புதல்வர் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை

July 27, 2026

தி மோசடிச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரான அனுத ஜனாதித்

deh

கல்கிசை மயான துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியும் கைது

July 27, 2026

தெஹிவளை – கல்கிசை மயானத்தில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது

dd

நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

July 27, 2026

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும்

sc'

மூங்கிலாறில் ஏழு மாதங்களாக ஆசிரியர் இல்லை

July 27, 2026

முல்லைத்தீவு, முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர்

figd

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்தக் கோரி யாழில் போராட்டம்

July 27, 2026

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரியும் நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில்

acci main

மனைவியின் பட்டமளிப்பு நிகழ்விற்காக சென்ற கணவன் – சகோதரன் பலி

July 27, 2026

மகியங்கனை பிரதேசத்தில் மனைவியின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த கணவர் உட்பட இருவர் விபத்தில்

den

 81 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள்  

July 27, 2026

இலங்கையில் நாளாந்தம் டெங்கு பரவல் வெகுவாக அதிகரித்துச் செல்கின்றது. நாட்டில் இவ்வருடம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை