செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளின் காலத்தை கண்டறியும் முறைக்காக வெறுமனே காபன் -14 பரிசோதனை முறைமை மட்டும் மேற்கொள்ளாது தடயவியல் பொருட்களை வைத்தும் காலத்தை கண்டறியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர் சட்டத்தரணி மீராக் ரஹீம் தனது அபிப்பிராயத்தை முன்வைத்தார்.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்படும் என்புத்தொகுதிகள் சிலவற்றை தவிர பெரும்பாலானவற்றில் துப்பாக்கி சன்னம் துளைத்தது போன்ற துளைகளோ குற்றச்சம்பவம் இடம்பெற்று கொல்லப்பட்டது போன்ற அடையாளங்கள் என்புத் தொகுதிகளில் இல்லை எனவும் நீதிமன்றில் ஆய்வு நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடலானது அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் நிபுணர்கள் குழுவுக்கும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்குமிடையில் நேற்றைய தினம் நடைபெற்றபோதே மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டது.