சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் நாங்கள் நமது சர்வதேச பொறிமுறையை நோக்கி எங்களது போராட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம் என அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க சர்வதேச மாநாட்டிற்கு ஆதரவு கோரும் முகமான கலந்துரையாடல் மற்றும் ஊடக சந்திப்பு இன்று (23) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு நூலக கேட்போர் கூடத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் பாஸ்கரன், உபதவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ச.சந்திரசேகரம், சிவில் சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீவன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் 30ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள மாநாடு தொடர்பிலான தெளிவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்குகள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இத்தோடு குறித்த நிகழ்விற்கு அனைத்து தரப்பில் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும், உதவிகளும் கோரப்பட்டது.

இதன்போது வருகை தந்தவர்கள் தங்களின் ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்ததுடன் குறித்த மாநாட்டிற்கு தங்கள் ஆதரவுகளையும் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.

இறுதியில் குறித்த மாநாடு தொடர்பில் தங்களின் ஆதரவு நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக ஊடகசந்திப்பும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி,

எதிர்வரும் 30-ம் தேதி நடக்கவிருக்கும் அந்த சர்வதேச மாநாடானது, எங்களது உறவுகளைத் தேடிய இந்த 17 வருட கால போராட்டத்திற்கு எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது, எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையும் நீதியும் வேண்டி நாங்கள் பலவாறு பலமுறை பல ஜனாதிபதிகளிடம் மாறி மாறி அந்த பல ஜனாதிபதிகளிடம் கேட்டு நின்று எமக்கு எந்தவித தீர்வும் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் நம்ம சர்வதேசத்தை நோக்கி எங்களது இந்த உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நாங்கள் எடுத்துச் சென்று இருக்கின்றோம்.

எங்களது உறவுகளின் இந்த போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு இந்த உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் நாங்கள் நமது சர்வதேச பொறிமுறையை நோக்கி எங்களது போராட்டத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்.

எங்களது உறவுகளுடன் இருந்து தங்களது பிள்ளைகள் வருவார்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து, வடக்கு கிழக்கில் 600-க்கும் மேற்பட்ட தாய்மார்களை நாங்கள் இதுவரை இழந்து நிற்கின்றோம். எங்களது தாய்மார்களுக்காக நாங்கள் இந்த மாநாட்டில் அவர்களுக்கான ஒரு நூல் வெளியீடும், அவர்களை அந்த தாய்மார்கள் உறவுகளைக் கௌரவிக்கும் ஒன்று அங்கு நடக்க இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, எங்களது காணாமல் போன உறவுகளின் நினைவுச் சின்னங்கள் அவர்கள் தங்கள் பிடிபடும்போதும், வலிந்து காணாமல் ஆக்கப்படும்போதும் தங்களது வீடுகளில் விட்டுச் சென்ற அவர்கள் பாவித்த ஒரு பொருள், அந்தப் பொருள்களை இன்று நாங்கள் காட்சிக்கு வைக்க இருக்கின்றோம், கண்காட்சிகள் அங்கு செய்ய இருக்கின்றோம்.

இவை அனைத்தையும் நாங்கள் 30-ம் தேதி சர்வதேச மாநாடாக தந்தை செல்வா மண்டபத்தில் நடத்த இருக்கின்றோம். இந்நிகழ்வில் அனைத்து உறவுகளையும், இங்கு கூடியிருக்கும் அனைவரையும் அன்பாக வந்து எங்களது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுநிற்கின்றோம்.

அதுமட்டுமல்ல, இன்று எங்களது போராட்டத்தை எடுத்துச்செல்வதற்கு உங்களது ஒத்துழைப்பும், உங்களது ஆதரவும் எங்களுக்கு என்றும் வேண்டும் என்றும், இந்த ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து நாங்கள் இந்த போராட்டத்தை வலுச்சேர்க்க வருவீர்கள் என்று அனைவரையும் கையெந்தி வருக வருக என்று கேட்டுநிற்கின்றோம்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 23, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான

phototune.ai_1787481855

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

August 23, 2026

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

a.

பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்

August 23, 2026

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி