இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது நல்லிணக்க முயற்சிகளில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, வடக்கில் காணிகளை விடுவித்தல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..