சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் பிரஜாசக்தி வேலைத்திட்டம்; புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

சமூக வலுவூட்டல் ஊடாக வறுமையை ஒழித்தல் மற்றும் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ தேசிய இயக்கம், தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இத்திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

‘பிரஜாசக்தி’ தேசிய வேலைத்திட்டம் குறித்து நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பூளர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (24) அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வின் போதே இவ்விடயம் குறிப்பிடப்பட்டது.

இதில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ‘பிரஜாசக்தி’ தேசிய இயக்கமானது புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வறுமை ஒழிப்புக்கான பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டமாகும் எனக் குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் மற்றும் முன்மொழிவுகள் ஊடாக கிராமிய அபிவிருத்திக்காக சுமார் 180 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தும் போது கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகளுக்கு விசேட பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பணிகள் அனைத்தையும் அதிகபட்ச வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் போது, பிரதேச செயலகப் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்களிடம் பாரிய பொறுப்பு காணப்படுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சமூக அபிவிருத்திச் சபைகளினால் 2026 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி முன்மொழிவுகளை அடையாளம் காணல், அவற்றை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் அந்த அபிவிருத்தி முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக்க பண்டார இதன்போது தெரிவித்தார்.

அதன்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஒட்டுமொத்த சமூகத்தினதும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியம், திட்டங்களைச் சரியாக அடையாளம் காணல் மற்றும் விஞ்ஞான ரீதியான அடிப்படையில் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தும் விதம் குறித்தும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்துகொண்ட பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் தெளிவுபடுத்தினார்.

அந்தச் செயன்முறையை மேற்கொள்வதற்கு அவசியமான தொழில்நுட்ப விடயங்கள் குறித்தும் அவர் இதன்போது விரிவாகக் கலந்துரையாடினார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமுமான ரங்க திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், அரச சேவையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்து நேர்மையை உறுதி செய்வது சமூகத்தின் முன்னோக்கிய பயணத்திற்கு எவ்வளவு தீர்க்கமானது என்பது குறித்தும், அரச உத்தியோகத்தர்களுக்கு அதற்கான பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்தும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் சோமசிறி ஏக்கநாயக்க, ‘பிரஜாசக்தி’ தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் போது பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புக்கள் மற்றும் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு

Saj

மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும் – சஜித் பிரேமதாச

March 4, 2026

எமது நாட்டை ஒரு சிண்டாக அறிமுகப்படுத்தியமை தொடர்பில் நாட்டிடமும் மக்களிடமும் ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டியது மிகவும் முக்கியமாகும் என எதிர்க்கட்சித்

lssp

லங்கா சமசமாஜக் கட்சியின் யாப்பை மீறி எவரும் செயலாளர் பதவியை கைப்பற்ற முடியாது

March 4, 2026

லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த

fue

போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்குமா?

March 4, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்