கொழும்பில் சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சி மற்றும் இலக்கிய விழா!

இலங்கையின் வாசிப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நாட்டில் முதன்முறையாக கொழும்பு சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியும் இலக்கிய விழாவும் – 2026 மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொழும்பு இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் குலதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த நாற்பது ஆண்டுகளில் டிஜிட்டல் ரீதியிலான கவனச்சிதறல்கள் காரணமாக இலங்கையின் வாசிப்பு கலாசாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனை மீளக்கட்டியெழுப்பும் நோக்கோடும், இலங்கையை தெற்காசியாவின் சிறுவர் இலக்கிய மையமாக மாற்றும் கனவோடும் இந்த கண்காட்சியை நாங்கள் முதன்முறையாக முன்னெடுக்கிறோம். இது வெறும் புத்தக விற்பனை சந்தையாக மாத்திரமன்றி, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இலக்கிய விழாவாகவும் அமையும். மார்ச் 24 முதல் 29 வரை காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை இக்கண்காட்சி பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

இந்த விழாவின் மற்றுமொரு முக்கிய அங்கமாக புத்தக தானத் திட்டம் அமையும். இதன் மூலம் சபரகமுவ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் உட்பட மொத்தம் 165 பாடசாலை நூலகங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. வாசிக்கும் தேசமே தலைமைத்துவம் வழங்கும் தேசமாக மாறும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

எனவே, எமது எதிர்கால சந்ததியினரின் அறிவுப் பசியைத் தீர்க்கும் இந்த மகத்தான முயற்சிக்கு ஊடகங்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் பொதுச்செயலாளர் லசித உமகிலிய தெரிவிக்கையில்,

சுமார் 26 ஆண்டுகளாக கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியையும், 20 ஆண்டுகளாக கண்டி புத்தகக் கண்காட்சியையும் வெற்றிகரமாக நடாத்தி வரும் எமது சங்கம், தற்போது சிறுவர்களுக்கென பிரத்யேகமாக இந்த சர்வதேச விழாவை வடிவமைத்துள்ளது.

சர்வதேச சிறுவர் புத்தக தினமான ஏப்ரல் 2ஆம் திகதிக்கு இணைவாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உலகத்தரம் வாய்ந்த இலக்கியங்களை ஒரே கூரையின் கீழ் எமது பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

நிகழ்வின் சிறப்பம்சங்கள் குறித்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தீபால் மொராயஸ் விளக்குகையில்,

இங்கு புத்தகக் கண்காட்சிகளுடன் இணைந்து கதை சொல்லும் அமர்வுகள், எழுத்தாளர்களுடனான சந்திப்புகள், ஆக்கத்திறன் பயிலரங்குகள் மற்றும் பல்வேறு போட்டிகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையிலான சந்திப்பு எனும் தொனிப்பொருளில் சுகாதார விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.

அத்தோடு, பல்கலைக்கழக பட்டப்படிப்பு வரை கல்வி கற்பதற்கு உதவும் வகையில் 20 சிறுவர்களுக்கு தருதிரிய புலமைப்பரிசில் திட்டமும் இங்கு அறிமுகப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டினார்.

இந்த பாரிய தேசிய முயற்சிக்கு இலங்கையினது முன்னணி நிறுவனங்கள் பல கைகோர்த்துள்ளன. இம்முறை கண்காட்சியினது பிரதான அனுசரணையாளராக எம். டி. குணசேன நிறுவனம் செயற்படுகின்றது. பிளாட்டினம் அனுசரணையாளர்களாக அகுரா, ரத்பிய , ஐ.பி.எம்.சி. , சமுத்ரா, சுபஹா மற்றும் ஜுபெரி ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. தங்க அனுசரணையாளர்களாக இமாஷி, ஜோன் கீல்ஸ் மற்றும் தயாவன்ச ஜெயகொடி ஆகிய நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன.

அத்தோடு, இக்கண்காட்சியினது சிறுவர் செயற்பாட்டுப் பங்காளராக புக் ஸ்டுடியோமற்றும் இலக்கிய விழாப் பங்காளராக ரூம் டு ரீட் அமைப்பும் செயற்படுகின்றன. அச்சு ஊடகப் பங்காளராக வீரகேசரி மற்றும்மிதின ஆகிய நாளிதழ்கள் செயற்படுவதுடன், இலத்திரனியல் ஊடகப் பங்காளராக சேனல் ஒன், ஏ பிளஸ் மற்றும் பாக்ஸ் வானொலி போன்றனவும், உபசரிப்பு பங்காளராக மெக்கீன் நிறுவனமும் இணைந்துள்ளன.

இலங்கையின் சிறுவர் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையவுள்ள இந்த சர்வதேச சிறுவர் புத்தகக் கண்காட்சியானது, சிறுவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டுவதோடு, அவர்களிடையே சமூக நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் ஒரு பாலமாக அமையும் என நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதிதிகள் நம்பிக்கையினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்

683205215_122290010084194641_7110331960142875781_n

வின்னிபெக் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்: ஒன்டாரியோ இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

வின்னிபெக் நகரில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச்

682498274_122290014542194641_8190665495581400332_n

வட ஒன்டாரியோ சிறுவன் கடத்தல் விவகாரம்: சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் குற்றவாளி

April 30, 2026

வட ஒன்டாரியோவில் (Northern Ontario) சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 37

687038414_122290016300194641_7422793790922838407_n

டொராண்டோ நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 30, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) நடந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்

iran

ஐக்கிய மக்கள் சக்தியின்பொறுப்புகளில் இருந்து விலகிய இரான் விக்ரமரத்ன

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்