கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர் தேனிசை செல்லப்பா -திருமாவளவன்

கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர் தேனிசை செல்லப்பாஎனவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் தனது அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன்.

தமிழ்த்தேசிய விடுதலைக் களத்தில் தனது எழுச்சிப் பாடல்களின் மூலம் பெரும்பங்காற்றிய தேனிசை செல்லப்பா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சிங்கிலிப்பட்டி என்னும் கிராமத்தைச் சார்ந்த செல்லப்பா அவர்கள், தொடக்ககாலத்தில் திராவிடர் கழகத்தின் மேடைகளிலும் பின்னர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் மேடைகளிலும் பாடிவந்தார்.

பின்னர் தமிழ்த்தேசியக் களத்தில் ஈடுபாடு கொண்டு தமிழீழ விடுதலைக்கான பாடல்களை இயற்றி பாடினார். அவரது பாடல்கள் எளிய மக்களை ஈர்க்கும் வகையில் இருந்தது.

கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர்.

தமிழீழத் தேசிய விடுதலைக் களத்தில் இவரது பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் ‘ பாசறைப் பாணர் ‘ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கொண்ட பற்றுதலால் விடுதலைச் சிறுத்தைகளுக்காக அவரே பல பாடலை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார்.

தனது எழுச்சிமிகு குரல்வளத்தால் உலகத்தமிழர்களிடையே தமிழ்த் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனிசை செல்லப்பா அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சீராக இல்லாமையினல் மேடைகளில் பாடாமல் ஓய்வு எடுத்து வந்தார்.  எனினும், கடந்த 2024 ஆம் ஆண்டு விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற “மாவீரர் நாள்” நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ்த்தேசிய பாடல்களை எழுச்சியுடன் பாடினார். அதுவே அவர் பாடிய கடைசி மேடையாகவும்  அமைந்தது.

தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் இழப்பு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பு!

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாளை (29.04.2026)  காலை சென்னை அருகே படப்பையில் நடைபெறும் அவரது நல்லடக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக பங்கேற்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்

Shakthivel

இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களின் கொடூர உண்மைகளை செம்மணி புதைகுழி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது – அருட்தந்தை மா. சத்திவேல்

June 14, 2026

செம்மணி சமூக புதைகுழி அகழ்வுப் பணிகளில் வெளிவரும் மனித எச்சங்களும், குழந்தைகளின் பாவனை பொருட்களும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்பு மற்றும்

appu

குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

June 14, 2026

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் வரை ஐக்கிய

arju

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் அர்ச்சுனா இராமநாதன்

June 14, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்