கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் அதிரடி!

கரூர்:

திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய அரசியல் பிரமுகருமான செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கு, டாஸ்மாக்கில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு செய்த புகார் மற்றும் மின்சார வாரியத்திற்கு டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி ஊழல் என அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, தற்போதைய தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர். இவர்களிடம் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான உயர்மட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில், இன்று காலை 7 மணி முதல் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையைத் தொடங்கினர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜியின் வீடு மட்டுமின்றி, மண்மங்கலம் அருகே உள்ள அவரது பூர்வீக வீடு, அவரது உதவியாளர் சுப்பிரமணியின் வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் என மொத்தம் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர்.

மேலும், கரூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் மற்றும் தொடர்புடைய முக்கிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையின் ஒரு பகுதியாகச் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசை கவிழ்க்க முயன்ற வழக்கின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறுகிறதா அல்லது டாஸ்மாக் மற்றும் மின்துறை ஊழல் புகார்களின் அடிப்படையில் நடைபெறுகிறதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அனைத்து இடங்களிலும் சோதனைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே இந்த ரெய்டு குறித்த முழு விவரமும் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் களத்தில் செந்தில் பாலாஜிக்கு நாளுக்கு நாள் நெருக்கடி முற்றி வரும் நிலையில், இந்த அடுத்தகட்ட அதிரடி ரெய்டு திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

#SenthilBalaji #DVACRaid #KarurNews #TamilNaduPolitics #BmNews #TasmacScam #TamilNews #PoliticalUpdate #BreakingNewsTN #DmkLeader #CorruptionCase #TvkGovernment #TamilNewsLive

Dollar-Rupee

வலுவடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!

July 30, 2026

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(30) அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க

he

SLS இல்லாத தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம்

July 30, 2026

ரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை,

jud

பெல்லன்வில படுகொலை; இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் விளக்கமறியலில்

July 30, 2026

ன நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதற்காக மேல் மாகாண

padd

பாகிஸ்தான் பொலிஸ் சாவடி மீது தாக்குதல்: 11 பொலிஸார் உயிரிழப்பு

July 30, 2026

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

w

அவசர சிவப்பு எச்சரிக்கை

July 30, 2026

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக

photo-collage.png (5)

செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்பு

July 30, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்த விடயத்தில் நீதி கோரி இன்று (30) கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

2

அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் வெளியிடப்படும் – அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு!

July 30, 2026

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து கோயில்களின் டெண்டர்களும் (ஒப்பந்தப்புள்ளி) இனி முற்றிலும் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்

1

கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா பகுதிகளை பார்வையிடச் செய்ய வேண்டும் – பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

July 30, 2026

தஞ்சாவூர்: தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் சென்றால், கர்நாடக முதல்வரைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா

ri

ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் வாக்குமூலம்

July 30, 2026

ழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில்

p

பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

July 30, 2026

தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனால் தாக்கல்

759904220_1447693574071231_6546049947903886204_n

பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு கொக்குவில் பொற்பதி அறிவாலயத்தில் இடம் பெற்றது

July 30, 2026

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு நேற்று புதன்கிழமை (29.07.2026) கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில்

nu

நுவரெலியா இளம் பெண் வைத்தியர் கொலை; விளக்கமறியல் விவகாரம்

July 30, 2026

நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நால்வரின் விளக்கமறியல் உத்தரவு