சென்னை:
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் திமுக பித்தலாட்ட நாடகங்களை அரங்கேற்றி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் திசைதிருப்பத் திட்டமிட்டுப் பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இத்தகைய கணிப்புகளைக் கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் நிலவிய கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தேர்தலிலும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் உறுதியாக வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார். திமுக தோற்கப்போவது உறுதி என்பதால், வாக்கு எண்ணிக்கையின் போது தில்லுமுல்லு செய்யவும், குழப்பத்தை விளைவிக்கவும் இத்தகைய மாய பிம்பத்தை திமுக உருவாக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், மக்கள் விரோத திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அதிமுகவின் நல்லாட்சி மீண்டும் மலரும் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
#EdappadiPalaniswami #ADMK #EPS #ExitPoll2026 #TNElectionResults #May4 #TamilNaduPolitics #DMKConspiracy #AIADMKVictory #VoterAwareness #BreakingNews #CountingDay #ElectionUpdate #TamilNaduPolls #HistoryRepeats #May1 #PoliticalStatement #Victory2026 #AmmaGovernment_