உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தகங்களை எழுதி குற்றங்களை மறைத்துக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் பெருத்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி, வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறத்து வைத்தார்.

பனை அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் கைப்பணிப் பயிற்சி பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொது கட்டடத்தில் கைப்பணிப் பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கட்டட்டன.

இவ் நிலையத்தினால் பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது உரையாற்றிய பிரதியமைச்சர்,

பல படுகொலைகள், பல குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகிறது.

எனவே, இவை எல்லாவற்றிற்கும் நீதி கிடைக்கக்கூடிய ஒரு நிலை இன்று காணப்படுகிறது. நாங்கள் மிக விரைவிலே இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். ஒரு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புத்தகங்களை எழுதி குற்றங்களை மறைத்துக் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலே இதற்கான விசாரணைகள் சரியான முறையிலே, நீதியான முறையிலே கொண்டு செல்லப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கும், நீதியை எதிர்பார்ப்பவர்களுக்கும் மிக விரைவிலே அந்த நீதி தேவதை தன்னுடைய தீர்ப்பைச் சரியான முறையிலே வழங்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல இன்னமும் இங்கு ஆண்ட, இங்கிருந்த பல குற்றச்செயலில் ஈடுபட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அவர்கள் செய்த குற்றச்செயல்களுக்கும், ஊழல்களுக்கும், கொலைகளுக்கும் நிச்சயம் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால், சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதை எமது அரசாங்கம் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.

சட்டம் என்பது பணக்காரனுக்கு ஒரு சட்டம், ஏழைக்கு ஒரு சட்டம், இன ரீதியான சட்டம், மொழி ரீதியான சட்டம், பிரதேச ரீதியான சட்டங்கள் கிடையாது. சட்டத்தின் முன் நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் சமமானவர்கள் என்பதைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதிலிருந்து, பல முதலமைச்சர்கள், பல அமைச்சர்கள், பல உயர் அதிகாரிகள் கைது வரை நாட்டிலே நீதி தேவதையினுடைய செயல்பாடுகள் சரியான முறையிலே நடைபெறுவதை நாங்கள் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

அதேபோல இன்று திவாலான எதிர்க்கட்சியினர் நாட்டிலே சில சில விடயங்களை அவர்கள் பிடித்துக்கொண்டு, மீண்டும் இந்த மக்களாட்சியை, இந்த நீதியான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீண்டும் கள்ளர் கூட்டம் ஆட்சிக்கு வர முடியும் என்று அவர்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

இன்று நாட்டிலே எதிர்க்கட்சி என்பது இல்லை. எதிர்க்கட்சி என்பது மக்களுடைய பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று எதிர்க்கட்சி என்பது, நாளுக்கு நாள் நகைச்சுவையைச் சொல்லுகின்ற கட்சிகளாகத்தான் இன்று எமது நாட்டிலே எதிர்க்கட்சித் தலைவரும் இருக்கிறார், எதிர்க்கட்சிகளும் இருக்கின்றன.

எனவே, நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் கூறினோம், ‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’. நீதியான நேர்மையான ஆட்சியை நாட்டிலே கொண்டு செல்வோம் என்று. இன்று நாட்டிலே இனவாதமற்ற, மதவாதமற்ற அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயல்படுகின்ற ஓர் ஆட்சியை நாங்கள் இன்று கொண்டு செல்கின்றோம்.

இன்று நாட்டிலே இனங்களுக்கு இடையிலான விரிசல்கள், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், இனங்களுக்கு இடையிலான சண்டைகள் இன்று கணிசமாகக் குறைந்திருக்கிறது என தெரிவித்தார்.

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து