
கண்டி, நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர்.
மபாகந்த பகுதியில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதில் பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரு மாணவனும் இரண்டு பெண்களுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த விபத்திலிருந்து முச்சக்கர வண்டியின் சாரதி தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளார்.