இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கேட்காமலேயே தனக்கு செய்த பெரிய உதவி குறித்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட விழாவில் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். அதை கேட்டவர்களால் அனிருத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெற்றி பெற வேண்டி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தானே செய்தாராம் நயன்தாரா. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி நிகழ்ச்சியில் தன் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் செய்த உதவி குறித்து பேசினார் விக்னேஷ் சிவன்.
நானும் ரௌடி தான் படத்தில் அனிருத்தை தான் ஹீரோவாக நடிக்க வைக்க நினைத்திருக்கிறார் அன்பான இயக்குநர். ஆனால் அது நடக்காமல் போகவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்தார். நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டை புதுச்சேரியில் நடித்தினால் நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
படக் கதையை எழுத புதுச்சேரிக்கு கிளம்பியிருக்கிறார். அனி, நான் புதுச்சேரி போகிறேன் என்று அனிருத்தை சந்தித்து சொல்லிவிட்டு பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அப்பொழுது விக்னேஷ் சிவனிடம் 250 ரூபாய் மட்டுமே இருந்தது. அது பேருந்து செலவுக்கு போய்விடும். புதுச்சேரியில் தங்க கையில் பணம் இல்லை. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் பேருந்தில் ஏறிவிட்டார். பணத்திற்கு என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் செல்போனில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.
எடுத்துப் பார்த்தால் அதை அனுப்பியவர் அனிருத். விக்கி, உங்க பையில் ரூ. 50 ஆயிரம் வைத்திருக்கிறேன் என்று அந்த மெசேஜில் இருந்திருக்கிறது. அதை பார்த்த விக்னேஷ் சிவனுக்கு அவரையும் அறியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்திருக்கிறது. ஜன்னலோரம் அமர்ந்திருந்த விக்னேஷ் சிவன் விடாமல் அழுதிருக்கிறார். இதில் ஜன்னல் கம்பி எல்லாம் நனைந்திருக்கிறது. கையில் காசு இல்லையே என நினைக்கும்போது பெரிய தொகையை நண்பன் கொடுத்ததும் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை.
யாருக்கும் தெரியாமல் அனிருத் செய்த உதவியை பட விழா மேடையில் தெரிவித்தார் விக்னேஷ் சிவன். அதை கேட்டு அனிருத், எனக்கு எதுவுமே தெரியாதே என்பது மாதிரி அமர்ந்திருந்தார். செலவுக்கு காசு இல்லாமல் தவிக்கும்போது செய்யும் உதவி இருக்கே, அதுவும் கேட்காமலேயே பணம் கொடுப்பது பெரிய விஷயம் அனிருத். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு என ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
அனிருத் தங்களின் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று எத்தனையோ இயக்குநர்கள் ஆசைப்படும்போது அவர் தன் படங்களில் இசையமைப்பதில் சந்தோஷம் என்றார் விக்னேஷ் சிவன்.