இடமாற்றப் பிரச்சினையை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வியாழக்கிழமை (02) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இந்த வேலைநிறுத்தக் காலப்பகுதியில் அவசர சிகிச்சை சேவைகள் மாத்திரம் வழமை போல் தடையின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.