சங்கீத்சன் பிணையில் விடுதலை!

சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சற்றுமுன்னர் பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்சன் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன், பயங்கரவாதம் தடைச்சட்டம் வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்து வழக்கு இன்று(12.06.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட நிலையில், சாதாரண வழக்காக மாற்றப்பட்டுள்ளதுடன், சங்கீத்சனுக்கு பிணை வழங்கப்பட […]

திரு சிவகுமார் செல்வரத்தினம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் தம்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவராணி சாமுவேல், சிவகாந்தன் செல்வரத்தினம், சிவரதி சிவபாலன், சிவநாதன் செல்வரத்தினம், சிவதாஸ் செல்வரத்தினம், சிவஇந்திரன் செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், குமார் சாமுவேல், சிவபாலன் வினாசித்தம்பி, அனிதா சிவநாதன், நந்தினி சிவதாஸ், வித்யா சிவஇந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரியாதர்ஷினி எபினேசர், அன்ட்ரூ […]

நீதித்துறை கட்டமைப்பின் நீதிபதிகளின் ஓய்வு வயது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பின் நீதிபதிகளது ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், நீதிபதிகளுக்கு மேலதிகமாக ஏனைய சில தொழில்வல்லுநர்களும் தங்களது […]

திருமதி விஜயராஜா இந்திராணி

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt யை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயராஜா இந்திராணி அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த(சிங்கப்பூர்) காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னம்மா(புங்குடுதீவு 6ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும், விஜயராஜா அவர்களின் பாசமிகு மனைவியும், சுகல்யா, கதீஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும், லிங்கேஸ்வரன், றயாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், ஜெயலட்சுமி மற்றும் குணரட்ணம்(ஜேர்மனி), […]

ஈரான் முற்றுகை நடவடிக்கையுடன் தொடர்புடைய அமெரிக்க போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது

அமெரிக்காவின் ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence-variant) ரகத்தைச் சேர்ந்த கடலோரப் போர் அதிவேகக் கப்பலான ‘யுஎஸ்எஸ் கன்பெரா’ (USS Canberra – LCS 30), வெள்ளிக்கிழமை (12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (US Central Command) உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, ஏப்ரல் 2026 இல், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான கடல்சார் முற்றுகையின் போது, இந்த யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. யுஎஸ்எஸ் துல்சா (USS […]

சங்கீத்சன் கைதில் பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவுகளை நீக்கி தண்டனைச் சட்டக் கோவைகளில் வழக்குத் தொடருமாறு சட்டமா அதிபர் விசேட பணிப்பு

சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபர் விசேட பணிப்புரை.. பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவுகளை நீக்கி தண்டனைச் சட்டக் கோவை பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு பணிபுரை சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கி, சட்டமா அதிபர் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு இன்றைய தினம் நீதிமன்றில் வழங்கப்பட்டு உள்ளது. சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்குத் தொடர்பில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துப் பொலிஸார் […]

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம்: நாடாளுமன்றில் நீதி அமைச்சரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், பதவியேற்ற ஒரே மாதத்திற்குள் பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில், வட மாகாண ஆளுநரின் அப்பட்டமான அரசியல் தலையீடு இருப்பதாக தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 27(2) பிரிவின் கீழ் அவர் நீதி அமைச்சரிடம் அவசரக் கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் […]

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் ஹிப்ஹாப் பாடகரின் கைது குறித்து பிரஸ்ஸல்ஸில் சாணக்கியன் கருத்து

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் ‘ஹிப்ஹாப் சங்கீ’ (Hiphop Sangee) என்று அழைக்கப்படும் தமிழ் ராப் பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனின் அண்மைக்கால கைது குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்துரையாடியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் (Brussels) உள்ள ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் (EEAS) தெற்காசியப் பிரிவின் (ASIAPAC) தலைவர் சார்லஸ் வைட்லியுடன் (Charles Whiteley) நடத்திய பேச்சுவார்த்தையின் போதே அவர் இக்கருத்துக்களை […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய இதுவரை தீர்மானிக்கவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தரவைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இந்த கட்டத்தில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் (Writ) மனு மீதான விசாரணையின் போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்த அறிவிப்பை விடுத்தார். 2019 உயிர்த்த […]

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி மரணம்

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler), உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 9 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார். மேலும், 2024 ஆம் ஆண்டில் 510 ஆண்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 595 மரணங்களும், 2025 ஆம் ஆண்டில் 309 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் உட்பட 376 மரணங்களும் பதிவாகியிருந்ததாக […]