இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த நிலைமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அங்கு Lanka IOC, Sinopec மற்றும் RM Packs உள்ளிட்ட எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.