நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும்

நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும் என்ற நோக்கத்திலே தமிழ் பேசும் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களும், தமிழர்களும் முட்டிமோதும் நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சிறுபான்மை சமூகங்கள் மீது ஆட்சியாளர்கள் தொடர்ந்து அலட்சியப்போக்கோடு நடந்து கொள்வார்களாக இருந்தால் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் அவர்களுக்கு புகட்டிய பாடத்தைப் போன்று அடுத்துவரும் தேர்தல்களில் நல்லதொரு பாடத்தை புகட்டுவதற்கு நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்றையதினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

நாம் கட்சியாம் இயங்க ஆரம்பித்தபோது கிழக்கில் பேரினவாத கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக நாங்கள் இருந்தோம். ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன , ஐக்கிய மக்கள் சக்தி, போன்றவை முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தோடு மோதி தனது ஆசனங்களை பெறுவதில் மிகப் பெரிய சிக்கல்களை எதிர்கொண்டன.

பலமான கட்சியாக உருவெடுத்த நாம் கடந்த இரண்டான்டு க்கு முன்னர் நடந்த மக்கள் போராட்டத்தின் பின்னணியில் ஏற்பட்ட விரக்தி மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தாக்கங்கள் பாரிய அளவில் சிங்கள மக்கள் மத்தியில் மனப்பதிவுகளை ஏற்படுத்தியதன் விழைவாக சிறுபான்மை கட்சிகளின் தயவு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை வென்றெடுப்பது என்பது சவாலுக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

அதுபோல் இனி இடம்பெறக்கூடாது என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம். இந்த அசாதாரனமான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முடிவுற்றது. அசாதாரன நேரத்தில் அசாத்தியமான தேர்தல் முடிவு இதுவாகும்.

ஜனாதிபதி தேர்தலில் வெரும் 44சதவீதம் பெற்றவர் பாராளுமன்ற தேர்தலில் 159 ஆசனங்கள் பெற்று சரித்திரம் படைத்துள்ளோம் என்று ஆணவத்துடனும் அகங்காரத்துடனும் கதைத்து திரிந்தால் உள்ளுராட்சி தேர்தலில் வழங்கிய பாடத்தையே புகட்ட நேரிடும்.

இந்த நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மாணிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும் என்ற நோக்கத்திலே தமிழ் பேசும் மக்கள் பேரவை என்ற ஒன்றை உருவாக்கிய உள்ளோம். மட்டக்களப்பு கோரளைப்பற்று, கல்முனை எல்லைப் பிரச்சினைகள் இருக்கின்றது. தமிழ் பேசும் சமுகங்களுக்கிடையில் முட்டி மோதுகின்ற ஒரு நிலவரம் இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த பேரவையை நாங்கள் செயற்படுத்துகின்ற போது இடையில் இருக்கின்ற இவ்வாரான சில முரண்பாடுகள் அதற்கு தடையாக இருக்கக் கூடாது இதற்காக உப குழுக்களை அமைத்து பேசப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற படு மோசமான நிகழ்வு மூலம் எமது சமூகத்தின் மீதும் இந்த காத்தான்குடி மீதும் மிகப் பெரிய பழியை சுமத்திய போது எல்லோரும் விழி பிதிங் தி செய்வதரியாது தடுமாறிய போது உண்மை எது வென்று நாங்கள் சொல்வதற்காக பல சந்தர்ப்பங்களில் எமது ஆசனங்களைக் கூட தியாகம் செய்து கூட்டாக இராஜினாமா செய்து பல போராட்டங்களை நடாத்தி இருக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னனியிலே புலனாய்வுத்துறை இருந்ததா? என்ற கேள்விக்கு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் பின்னனியில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த அரசாங்கம் சரிவர விசாரணை செய்து உண்மை வெளிப்பட வேண்டும் என்று சொல்லும் அதேநேரம் தமிழ் பேசும் பேரவையை குழப்புவதற்காக வடக்கு வைத்தியசாலை சம்பவத்தை மையப்படுத்தி சிந்து விளையாட்டை செயற்படுத்த முனைந்தனர்.

எவ்வாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி மேற்கொள்ளப்பட் டதோ அவ்வான சதித் திட்டங்கள் இன்னும் பல அரங்கேற்றப்படலாம் நாம் அவதானமாக இருக்க வேண்டும் என்று எமது சக தமிழ் பேசும் தலைமைகளுடன் பேசி வருகின்றோம் அவதானமாகவும் இருக்கின்றோம்.

நமது இளைஞர்களின் எதிர்காலம், கல்வி வாய்ப்புகள் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் நாம் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. சமூகத்தில் நிலவும் குழப்பங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் மத்தியில், நாம் அனைவரும் ஒரே நேர்கோட்டில் ஒற்றுமையாக நிற்பதே நமது பலமாகும். நாம் பிரியும்போது நமது குரல் பலவீனமடைகின்றது; ஆனால் நாம் ஒன்றிணைந்து நிற்கும்போது நமது கோரிக்கைகளை எவராலும் புறக்கணிக்க முடியாது

எனவே, உணர்ச்சிவசப்படாமல் சிந்தனையோடும் விழிப்புணர்வோடும் நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். வரவிருக்கும் காலங்களில் நமது உரிமைகளை வென்றெடுக்கவும், நமது பிரதேசத்தின் அபிவிருத்தியை உறுதி செய்யவும் உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றேன் என்றார்.

un

13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் இணைய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம்…

September 17, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் சிறுவர்களின் இணையப் பயன்பாடு தொடர்பில் முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

mul

முல்லைத்தீவு வைத்தியசாலையின் 4 மாடிக் கட்டிட பணிகள் ஆரம்பம்

September 17, 2026

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ip

இந்தியாவில் 2027 IPL ஏலம்

September 17, 2026

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட்

m

மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

September 17, 2026

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின்

rain

பல பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் மழை

September 17, 2026

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை

mad

யாழில் அரச சேவை வலைப்பந்தாட்ட போட்டிகள்!

September 17, 2026

2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது. இலங்கை அரச

tri

திருகோணமலையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டல்

September 17, 2026

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை

t

முகாமையாளரை பதவி விலகக் கோரி தொழிற்சங்கங்கள் போராட்டம்

September 17, 2026

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி விலகுமாறு கோரி, 26 புகையிரத தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்றுப் புதன்கிழமை (16)

canc

அதிகரிக்கிறது புற்றுநோய் சிகிச்சைகளுக்குரிய நெருக்கடி!

September 17, 2026

இலங்கையின் சுகாதார அமைப்பில் நாளுக்கு நாள் கடுமையான நெருக்கடி நிலை உருவாகி வருவதுடன், இதனால் புற்றுநோயாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக

ha

நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும்

September 17, 2026

நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும் என்ற நோக்கத்திலே தமிழ் பேசும்

BVR_1533

“வியாதி மக்களுக்கு… லாபம் பாஜகவுக்கு!” – மருந்து நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து மனோ தங்கராஜ் கடும் சாடல்

September 16, 2026

சென்னை: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்து வரும் நிலையில், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பாஜக

dailythanthi_2026-09-16_cz6irufu_CHENNAI-09

“அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை; தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!” – அன்பில் மகேஷ் விவகாரத்தில் கே.என். நேரு கடும் கண்டனம்

September 16, 2026

திருச்சி: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்