ழ். மாவட்ட செயலகத்திற்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மாவட்ட செயலகத்தின் உள்ளிருந்தவாறே தனது கைபேசியினூடாக நேரலையில் அவதானித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தின் நிகழ்விற்காக அமைச்சர் வருகை தந்திருந்த வேளையில், வெளியே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பரபரப்பான சூழல் நிலவியது. இதன்போது வெளியே இடம்பெற்ற போராட்டக் காட்சிகளை முகநூல் பக்கத்தின் நேரலை ஊடாக அமைச்சர் தனது கையடக்கத் தொலைபேசியில் நேரடியாகக் கண்காணித்துள்ளார்.