தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா நேரடியாகத் தொடர்பிலிருந்த ஒரு தீவிரவாதி என்று தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்கும் நோக்கில், புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் அப்பட்டமான பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவ்வியக்கம், இத்தகைய பின்னணியைக் கொண்ட அசாத் மௌலானாவின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டே அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் புதன்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசபக்தி தேசிய இயக்கத்தின் பிரதிநிதியும் சட்டத்தரணியுமான சஞ்சீவ வீரவிக்ரம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஏதேனும் ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில் அவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘சிறிசேன குரே எதிர் சட்டமா அதிபர்’ வழக்குத் தீர்ப்புக்கு அமைய, ஒருவரைக் கைது செய்வதற்கு முன்னர் அதற்கான தகுந்த காரணங்களும் சான்றுகளும் அதிகாரிகளின் வசம் இருக்க வேண்டும். ஆனால், ஷானி அபேசேகர தலைமையிலான அதிகாரிகளிடம் அத்தகைய சான்றுகள் எதுவும் இருக்கவில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனையோ அல்லது நீதவானின் பிடியாணயோ இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது முழுமையாக ஒரு தன்னிச்சையான நடவடிக்கையாகும்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய திருத்தங்களின்படி, நபரொருவர் கைது செய்யப்பட்டால் 48 மணி நேரத்துக்குள் அது குறித்து நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அதனைச் செய்யாமல் மறைத்ததுடன், எமது சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்துக்குச் சென்று வினவிய பின்னரே அவரைத் தடுத்து வைத்துள்ளதை ஒப்புக்கொண்டனர். பிரான்ஸில் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் டீ811ஃ23 என்ற வழக்கின் கீழ் திறந்த பிடியாணை நிலுவையில் உள்ள நிலையில், ஷானி அபேசேகர அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தனியாகச் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை முற்றிலும் சட்டவிரோதமான செயலாகும்.

மேலும், சுரேஷ் சலே தாக்கல் செய்த சீராய்வு மனுவுக்கு எதிராக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள இடைமனுவில் அப்பட்டமான பொய்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2012 முதல் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடக்கும் வரை சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளராகப் பணியாற்றினார் என கர்தினால் ஆண்டகை தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உண்மை நிலைமை என்னவெனில், சுரேஷ் சலே 2006 முதல் 2009 வரை பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு நடவடிக்கைகளை முறியடிக்கும் சிறப்புப் பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் 2012 முதல் 2015 வரை இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த அவர், 2016 முதல் 2019 வரையான காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலும், இந்திய இராணுவக் கல்லூரியிலுமே கடமையாற்றினார். அக்காலப்பகுதியில் அவர் இராணுவப் புலனாய்வுத் துறையில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை.

இவ்வாறான அநீதியான முறையில், பொய்களை அடிப்படையாகக் கொண்டு அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவரது தடுத்து காவல் உத்தரவை மேலும் நீடிக்காமல் உடனடியாக அவரை விடுவிக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்

parliment

22ஆவது திருத்தம்: NPP எம்.பியும் மனுத்தாக்கல்

August 27, 2026

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி உயர்

court-judge-hammer-gavel-696x398

விபத்தில் ஏழு பேர் பலி: சாரதிக்கு 13 வருட கடூழியச் சிறை உறுதி

August 27, 2026

2017ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த தனியார் பேருந்து

anu

இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு நாட்டில் இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

August 27, 2026

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

29

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே?

August 27, 2026

இறுதி யுத்தத்தின்போது பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத

images

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

August 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா

WhatsApp Image 2026-08-27 at 21.05.58

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை உள்ளிருந்தே அவதானித்த நீதி அமைச்சர்!

August 27, 2026

ழ். மாவட்ட செயலகத்திற்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

image-3

“தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் பிராட்போர்ட்டை விட சவ் மிதமான முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்கிறார்: புதிய கருத்துக்கணிப்பு”

August 27, 2026

தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட்டை (Brad Bradford) விட மேயர் ஒலிவியா

VY2W6BYOCZCY7BAEUEAELD7BWQ

அமெரிக்க மதுபானங்கள் மீது 50% பரஸ்பர வரி விதிப்பு: சஸ்காட்செவன் மாகாண முதல்வர் அறிவிப்பு”

August 27, 2026

கனடிய மற்றும் சஸ்காட்செவன் மாகாணப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரிக்குச் சமமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்

G6QTDEE7VM4KKKO7SMGUOBCGUQ

“அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடா தனது பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்துகிறது; உள்ளூர் ஒப்பந்த நிறுவனங்களுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகின்றன.”

August 27, 2026

உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்: அமெரிக்க இராணுவப் பொருட்களின் மீதான சார்பைக் குறைக்கும் நோக்கில், கனடா தனது சொந்த பாதுகாப்புத் துறையை

Y4W5TH5GFS4MPVWLBSFBYD3QJU

எதிர்க்கட்சித் தலைவர்களுடனான தொலைபேசி உரையாடல்களில் ‘ஒருங்கிணைந்த கனடா’ (Team Canada) வர்த்தக அணுகுமுறையை பிரதமர் கார்னி வலியுறுத்தல்”

August 27, 2026

ஒன்றிணைந்த அணுகுமுறை: அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் ஆலோசனை

5S63KUZ7LRA5DCV2SXTV3CLIRE

“அமெரிக்காவின் பெரும்பாலான அலுமினியம் கனடாவிலிருந்தே பெறப்படுகிறது. அதற்கு மாற்று அமைப்பது மிகக் கடினம் என தொழில் துறை கருத்து.”

August 27, 2026

அமெரிக்காவிற்கு மாற்று இல்லை: அமெரிக்கா தனது தேவைக்கான முதன்மை அலுமினிய இறக்குமதியில் 75% கனடாவையே நம்பியுள்ளது. கனடா நிறுவனங்கள் ஐரோப்பா