யாழ் மாவட்ட செயலக பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் மீதான பலப்பிரயோகத்துக்கு தமிழ்த்தலைமைகள் கண்டனம்!

தமக்கு நீதிவேண்டிப் யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தாய்மார் பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், அவற்றை உள்ளே இருந்தவாறு கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பார்த்துக்கொண்டிருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் செயலையும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் செவ்வாய்க்கிழமை (25) யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் பொலிஸாரினால் இழுத்துச்செல்லப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு வெளியே தள்ளிவிடப்பட்டனர்.

அதுமாத்திரமன்றி பேஸ்புக் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட இந்தப் போராட்டக் காணொளியை நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மாவட்ட செயலகத்துக்குள் இருந்தவாறு அவரது கையடக்கத்தொலைபேசியில் பார்வையிடும் புகைப்படமொன்றும் பேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டு பலரதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ‘வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் தாய்மார் நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து பொலிஸாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி, ‘இந்தச் சம்பவங்களை மாவட்ட செயலகத்துக்குள் இருந்து தனது கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பார்த்துக்கொண்டிருந்த நீதியமைச்சர் எனக் கூறப்படுபவரின் செயலையும், இவற்றை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர்களை பகிரங்கமாக தாக்கிப்பேசிய அமைச்சர் சந்திரசேகரனின் செயலையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்’ என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களைப் போலவே செயற்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகக் கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இழந்திருப்பதாகவும், சுயாதீன சர்வதேச நீதிப்பொறிமுறையே அவர்களது கோரிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இப்போராட்டம் குறித்துக் கருத்துரைத்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், ‘வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் பல வருடங்களாக இடம்பெற்று வருகிறது. ஆனாலும் இந்தப் போராட்டம் ஏன் அந்த உறவுகளின் போராட்டமாக மட்டுமே இன்னமும் இருக்கிறது? தன் ஒற்றை உறவைத் தேடி அலையும் இந்த அம்மா இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையே கோரி நிற்கிறார்.

இந்தப் போராட்டத்தினை இந்த அம்மாவுடன் நாங்கள் எங்கள் வசதிக்காக மட்டுப்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் அறம் சார்ந்து நிற்கும் இந்த அம்மாவின் போராட்டம் எம் இனத்தின் விடுதலைக்கானது என்பதை உணர மறுக்கிறோம். இந்த அம்மா எங்களுக்காகவுமே போராடுகிறார். சிங்கள பௌத்த பேரினவாத இலங்கை அரசினால் எங்களது இன்னுமொரு உறவு காணாமலாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே உரத்துக் குரல் கொடுக்கிறார்.

‘இவர்கள் தெருவில் நின்று போராடுவதனால் தான் எங்கள் இழப்புக்களும் வலிகளும் இன்னமும் உயிர்ப்புடன் உலக அரங்கில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்களின் எண்ணிக்கையில் தங்கியிருப்பது அல்ல போராட்டம். இனமாக ஒன்றிணைவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

HPgenfsb0AEZu1o

“கடந்த 6 ஆண்டுகளில் தி.மு.க.வில் நடந்ததைச் சொல்லட்டுமா?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ ராஜாவின்

1200-675-27496391-thumbnail-16x9-cmvijay

சட்டப்பேரவை மரபை மாற்றிய முதலமைச்சர் விஜய்: சக அமைச்சர்களுடன் அமர்ந்து நிகழ்வுகளைக் கவனித்த சுவாரஸ்யம்!

August 27, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கென ஒதுக்கப்பட்ட பிரத்யேக இருக்கையில் அமராமல், சக அமைச்சர்களுடன்

1200-675-27498226-thumbnail-16x9-pinhole

உலகின் முதல் நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம்: சென்னையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

August 27, 2026

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகின் முதல் ‘பின்ஹோல் பியூபில்லோபிளாஸ்டி’ (Pinhole Pupilloplasty –

photo-collage.png

செம்மணி மனிதப் புதைகுழி; ஐ.நா விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர்

August 27, 2026

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள்

rum

ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்

August 27, 2026

பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக்

parliment

22ஆவது திருத்தம்: NPP எம்.பியும் மனுத்தாக்கல்

August 27, 2026

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி உயர்

court-judge-hammer-gavel-696x398

விபத்தில் ஏழு பேர் பலி: சாரதிக்கு 13 வருட கடூழியச் சிறை உறுதி

August 27, 2026

2017ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில் 7 பேர் உயிரிழக்கக் காரணமாகவிருந்த தனியார் பேருந்து

anu

இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு நாட்டில் இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி

August 27, 2026

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

29

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே?

August 27, 2026

இறுதி யுத்தத்தின்போது பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இதுவரை கூற முடியாத

images

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான், கருணா மற்றும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புகளுடன் அசாத் மௌலானா தொடர்பிலிருந்தார் – தேசபக்தி தேசிய இயக்கம் திட்டவட்டம்

August 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள், பிள்ளையான் தரப்பு, கருணா தரப்பு மற்றும் சஹ்ரானின் தவ்ஹீத் ஜமாத் ஆகிய அமைப்புகளுடன் அசாத் மௌலானா

WhatsApp Image 2026-08-27 at 21.05.58

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை உள்ளிருந்தே அவதானித்த நீதி அமைச்சர்!

August 27, 2026

ழ். மாவட்ட செயலகத்திற்கு வெளியே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

image-3

“தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் பிராட்போர்ட்டை விட சவ் மிதமான முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்கிறார்: புதிய கருத்துக்கணிப்பு”

August 27, 2026

தேர்தல் நாளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கவுன்சிலர் பிராட் பிராட்போர்ட்டை (Brad Bradford) விட மேயர் ஒலிவியா