ஐபோன் ‘ஜீரோ-கிளிக்’; இலங்கையில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள ஐபோன் பயனாளர்கள் மத்தியில் புதிய ‘ஜீரோ-கிளிக்’ (zero-click) இணையத் தாக்குதல் ஒன்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது தொடர்பாகப் பலரும் இலங்கை கணினி அவசர எதிர்வினைப் பிரிவிடம் (Sri Lanka CERT) முறைப்பாடு செய்துள்ளனர்.

பழைய பதிப்புடைய ஐபோன் (iOS) இயங்குதளங்களை இயக்கும் சாதனங்களை இந்தத் தாக்குதல் இலக்கு வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தீங்கிழைக்கும் இணைப்புகளை (malicious links) கிளிக் செய்வதோ, QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதோ தேவையின்றி, அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தத் தாக்குதல் வழிவகுக்கிறது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் இத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவங்களை எதிர்கொண்டுள்ளதாகவோ அல்லது அறிவித்துள்ளதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இச்சுத்தமானது வெளிநாட்டுப் பயனாளர்களுக்கு மாத்திரம் உரியதல்ல என்பது தெளிவாகிறது.

இத்தாலிய இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் தடயவியல் விசாரணையின்படி, இணைக்கப்பட்ட சாதனங்களை (linked devices) ஒத்திசைப்பது தொடர்பான பாதிப்புகளைத் தாக்குதலாளர்கள் பயன்படுத்தக்கூடும் எனத் தெரியவருகிறது. பதிவாகிய சில சம்பவங்களில், பாதிக்கப்பட்ட கணக்குகள் மூலம் பணம் அனுப்புமாறு கோரும் அங்கீகரிக்கப்படாத வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

சில சந்தர்ப்பங்களில், வாட்ஸ்அப்பின் ‘இணைக்கப்பட்ட சாதனங்கள்’ அமைப்புகளின் கீழ் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை என்பதைப் பயனாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கணக்கைக் கைப்பற்றியதை எளிதில் கண்டறிவது கடினமாகியுள்ளது. கணக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த பின்னர், வாட்ஸ்அப் குழுக்களின் நிர்வாகி (administrator) உரிமைகளையும் தாக்குதலாளர்கள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

16.7.12 க்கும் முந்தைய iOS பதிப்புகளை இயக்கும் ஐபோன்களுடன் இந்தத் தாக்குதல் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படுவதால், காலாவதியான இயங்குதளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள் இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றன.

QR-குறியீடு ஃபிஷிங் அல்லது தீங்கிழைக்கும் இணைப்புகளை உள்ளடக்கிய வழக்கமான வாட்ஸ்அப் மோசடிகளைப் போலன்றி, இந்த ஜீரோ-கிளிக் நுட்பத்திற்குப் பாதிக்கப்பட்டவரின் நேரடி ஈடுபாடு எதும் தேவையில்லை. இதனால் பயனாளர்கள் இதனை அடையாளம் கண்டு தடுப்பது மிகவும் கடினமானதாக அமைகிறது.

பயனாளர்கள் உடனடியாகத் தங்களது ஐபோன்களை ஆதரிக்கப்படும் சமீபத்திய iOS பதிப்பிற்குப் புதுப்பிக்குமாறும், மிக அண்மைய வாட்ஸ்அப் புதுப்பிப்பை (update) நிறுவுமாறும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், வாட்ஸ்அப்பின் இரு-படி சரிபார்ப்பு (two-step verification) மற்றும் அரட்டைப் பூட்டு (Chat Lock) அம்சங்களை இயக்குமாறும் பயனாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அறியப்பட்ட ஒரு தொடர்பிலிருந்து பணம் அல்லது ரகசியத் தகவல்களைக் கோரும் அசாதாரண கோரிக்கைகள் பெறப்படும்போதும், அக்கோரிக்கைகள் உண்மையானவைதானா என்பதை வேறு நம்பகமான தொடர்பு ஊடகம் மூலம் சுயாதீனமாகச் சரிபார்க்குமாறும் அவர்கள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

நிதி ரீதியான நோக்கங்களைக் கொண்ட இணையக் குற்றவாளிகளால் அதிநவீன ஜீரோ-கிளிக் சுரண்டல் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது குறித்த வளர்ந்து வரும் கவலைகளை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், மொபைல் இயங்குதளங்களையும் செயலிகளையும் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 23, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான

phototune.ai_1787481855

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

August 23, 2026

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

a.

பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்

August 23, 2026

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி