சனிக்கிழமை (ஆகஸ்ட் 1, 2026) அதிகாலை மிசிசாக்காவில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்ததைத் தொடர்ந்து, பீல் பிராந்திய பொலிஸார் (Peel regional police) சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
கத்திக்குத்துச் சம்பவம் குறித்து கிடைத்த தகவலையடுத்து, அதிகாலை சுமார் 1:00 மணியளவில் டிக்ஸி வீதி (Dixie Road) மற்றும் எக்லிண்டன் அவென்யூ (Eglinton Avenue) பகுதிக்கு பொலிஸார் விரைந்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (trauma centre) கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சுமார் 5 அடி 11 அங்குல உயரமும், ‘கார்ன்ரோஸ்’ (cornrows) பாணி தலைமுடியும் கொண்ட ஒரு கருப்பின மனிதர் என்றும், அவர் கரீபியன் உச்சரிப்பில் பேசக்கூடியவர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக சிவப்பு வரிகள் கொண்ட கருப்பு நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற காலணிகளை அணிந்திருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், சந்தேக நபர் இருண்ட நிறத்திலான ‘மினிவேன்’ (minivan) வாகனத்தில் அப்பகுதியை விட்டுத் தப்பிச் செல்வதைக் கண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.