தெற்கு இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம்

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் மின்சார விநியோகம், ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு சில கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 7:46 மணிக்கு (GMT 1746) நிலவிய இந்நிலநடுக்கம், நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் சுமார் 3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இத்தாலியின் தேசிய புவிப் பௌதிகவியல் மற்றும் எரிமலை இயல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக நேபிள்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்குச் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இத்தாலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை மீட்புப் பணிகளுக்கான அவசர அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கான உள்ளூர் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்று என இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்க அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளை நோக்கி ஓடிவந்து தஞ்சமடைந்தனர்.

அடர்ந்த மக்கள் தொகையைக் கொண்ட எரிமலைப் பகுதியான கம்பீ பிளெக்ராய் பகுதியில் சமீபத்திய வருடங்களாக நிலநடுக்க அதிர்வுகள் அதிகரித்து வருகின்றன.

சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு வழக்கமானவை என்றாலும், இதுபோன்ற வலுவான அதிர்வுகள் 1980களின் தொடக்கத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு நெருக்கடியை நினைவூட்டுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரண நிகழ்வாகும். கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய இத்தாலியில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 300 பேர் வரை உயிரிழந்தனர்.

அதேபோல, 1980ஆம் ஆண்டு நவம்பரில் தெற்கு இத்தாலியின் இர்பினியா பகுதியில் ஏற்பட்ட 6.9 ரிச்டர் அளவிலான மிக மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 2,700 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

FJ2EC5CVSSM7SDYWIOEWAVR7XY

கிரெமோனா (Cremona) அருகே 21 வயது பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து தீவிர விசாரணை

August 1, 2026

அல்பர்ட்டா (Alta.), கிரெமோனா அருகே பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

P4SXUOOD6FCQNOVEGHD67CWGZU

நோர்த் யார்க்கில் (North York) நெடுஞ்சாலை 400-ஐ முடக்கிய கொடூர விபத்து: ஒருவர் பலி

August 1, 2026

சனிக்கிழமை காலை நோர்த் யார்க்கில் உள்ள நெடுஞ்சாலை 400 (Highway 400)-ல் ஏற்பட்ட கொடூர வீதி விபத்து காரணமாக, வடக்கு

5

200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? – சீமான் ஆவேச கேள்வி!

August 1, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை

4

5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடையை நீட்டித்த உயர்நீதிமன்றம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

August 1, 2026

சென்னை: தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

3

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை த.வெ.க அரசு உடனடியாக கூட்ட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

August 1, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும் என விடுதலை

gan

பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார்

mi

மின்னல் தாக்கியதில் வீடு முற்றாக எரிந்து சேதம்!

August 1, 2026

அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில்

co

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers)

donadltrumps

“அமைதி வாரியம்” எட்டிய ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி கருத்து

August 1, 2026

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதமேந்திய பலஸ்தீனக் குழுக்களை முழுமையாக ஆயுதமேற்கச் செய்வதற்காக, தன்னுடைய “அமைதி வாரியம்”

ita

தெற்கு இத்தாலியில் பூமியதிர்ச்சி : கட்டடங்கள் சேதம்

August 1, 2026

தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகில் அமைந்துள்ள கம்பீ பிளெக்ராய் பகுதியில் வெள்ளிக்கிழமை (31ஆம் திகதி) 4.7 ரிச்டர் அளவில்

Sanak

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் நீதிமன்றங்களின் சுயாதீனமான செயற்பாடுகள் வரவேற்புக்குரியவை – சாணக்கியன்

August 1, 2026

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டு, பல தீர்ப்புகளை வழங்கி வருவது

vad

வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்!

August 1, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு