செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சி – கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு!

செம்மணி மனித புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சி மற்றும் விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த கால ஆட்சியாளர்களினால் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளினால், கைதுகளினால் ஆரம்பத்தில் போதைப்பொருள் வர்த்தகம் குறைவடைந்திருந்தபோதும் தற்போது அது மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் போதைப்பொருள் வர்த்தகம் அதிகளவில் நடக்கின்றது. யுத்தத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு, கிழக்கில் போதைப் பொருள் என்பது மிக மிக அரிது. எனெனில் விடுதலைப்புலிகளிடம் மிகக் கட்டுக்கோப்பான நிர்வாகம் இருந்தது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்குஇகிழக்கில் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை இராணுவத்தினரும் இராணுவத்தினரோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களும் பேரினவாத குழு அரசியலோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களுமே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் கலாசாரத்தை,பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக, தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டும் என்பதற்காக சீரழிக்க வேண்டும் என்பதற்காக போதைப்பொருள் வர்த்தகம் திட்டமிடப்பட்ட முறையில் வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போதைய ஆட்சி இதனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.தற்போது கூட வடக்குஇகிழக்கில் மாணவர்களிடையில், அவர்களை முக்கிய இலக்காகக் கொண்டு இந்த போதைப் பொருள் வர்த்தகம் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் போதைப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

செம்மணி மனிதப்புதை குழியில் இது வரை 412 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழினப் படுகொலை நடந்ததற்கான முக்கிய சாட்சியாகவுள்ளது.செம்மணி மட்டுமல்ல வடக்குஇகிழக்கில் திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட பெண்கள்,குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல மனிதப் புதைகுழிகள் உள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சிக்கு இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்குகின்றது.செம்மணி விடயத்தில் அரசாங்கத்தின் நிதி மட்டும் போதாது நீதியும் வேண்டும். இந்தப் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களை கண்டறிய வேண்டுமானால் அதற்கு சர்வதேச பொறிமுறையே வேண்டும்.

இந்தப்படுகொலைகளுக்கு இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச என்பவர் சாட்சியாகவுள்ளார்.இந்தப்படுகொலையுடன் இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் தொடர்புபட்டுள்ளதால் உள்ளூர் விசாரணை மூலம் உண்மைகள் வெளிவராது. எனவேதான் சர்வதே பொறிமுறையுடனான விசாரணை அவசியமாகவுள்ளது

இது ஒரு அப்பட்டமான தமிழினப்படுகொலை.இவ்வாறான தமிழினப்படுகொலைகள் வடக்கு, கிழக்கில் பல இடங்களில் நடந்துள்ளன. செம்மணி மனிதப்புதக்குழி தொடர்பான அகழ்வாராய்ச்சிஇ விசாரணைகளை திசை திருப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடனேயே விடுதலைப்புலிகளை மலினப்படுத்துவதற்காக கிழக்கில் குருக்கள் மடத்தில் ஒரு மனிதப் புதைகுழி இருப்பதாக கூறி செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளை திசை திருப்ப முயன்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான நீதி விசாரணை வேண்டுமென்றே நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

dead'

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

August 24, 2026

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ANURA PARL

சுரேஸ்சாலேயின் தாயாரும் அனுரவிற்கு கடிதம் எழுதினார்-

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேயின் தடுப்;;புக்காவல் உத்தரவை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீடிக்க கூடாது என சாலேயின் தாயார்

suresh11

சுரேஸ் சாலேக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு – தேசிய அமைப்புகளின் ஒன்றியம்

August 24, 2026

தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ்சாலேக்கு எதிராக மூன்றாவது தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிப்பதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும் அவரை உடனடியாக

778972206_1621427252686601_4469929818179508992_n

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்க இராணுவம் முயற்சி: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவிப்பு..!

August 24, 2026

பலாலி பகுதியில், இராணுவம் தொடர்ந்து கையகப்படுத்தியுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுற்றி நடைபெறும் போராட்டத்தில் இன்றைய தினம்

go

50 கிராம் தங்கக்கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி

August 24, 2026

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி “தங்கம் தின்னும் மிருகம்” (அதிகமாகப் பணம் செலவழிப்பவர்கள் என்ற என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.

phi

தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

August 24, 2026

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க

sak

கிளிநொச்சியில் விபத்து: அல்வாய் இளைஞன் உயிரிழப்பு

August 24, 2026

கிளிநொச்சி பளைப் பகுதியில் சனிக்கிழமை (22.08.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்